பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தச்சுத் தொழிலாளர்கள் 2 பேர் பலியானார்கள்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தச்சுத் தொழிலாளர்கள் 2 பேர் பலியானார்கள்.
பொள்ளாச்சியை அடுத்த கொள்ளுப்பாளையத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 65). இவரது நண்பர் கோட்டூரைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (வயது 45). இருவரும் தச்சு தொழிலாளர்கள்.
இவர்கள் இருவரும் இன்று வேலைக்குச் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சி நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். பொள்ளாச்சி - பல்லடம் சாலையில் விஜயபுரம் அருகே வந்த போது, அங்குள்ள பெட்ரோல் பங்க்கில் இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டு சாலையை கடந்தனர்.
அப்போது திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி நோக்கி அதிவேகமாக வந்த கார், சாலையை கடந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட இருவரும் தலையில் பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு 108 வாகனத்தில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனை செல்லும் வழியில் அவர்கள் 2 பேரும் உயிரிழந்தனர். விபத்தில் கார் அருகில் உள்ள மரத்தில் மோதி நின்றது. இதில் காரை ஓட்டி வந்த திருப்பூரைச் சேர்ந்த தாமோதரன் என்பவரும் காயமடைந்தார். கார் ஓட்டுநர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சியை அடுத்த கொள்ளுப்பாளையத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 65). இவரது நண்பர் கோட்டூரைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (வயது 45). இருவரும் தச்சு தொழிலாளர்கள்.
இவர்கள் இருவரும் இன்று வேலைக்குச் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சி நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். பொள்ளாச்சி - பல்லடம் சாலையில் விஜயபுரம் அருகே வந்த போது, அங்குள்ள பெட்ரோல் பங்க்கில் இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டு சாலையை கடந்தனர்.
அப்போது திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி நோக்கி அதிவேகமாக வந்த கார், சாலையை கடந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட இருவரும் தலையில் பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு 108 வாகனத்தில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனை செல்லும் வழியில் அவர்கள் 2 பேரும் உயிரிழந்தனர். விபத்தில் கார் அருகில் உள்ள மரத்தில் மோதி நின்றது. இதில் காரை ஓட்டி வந்த திருப்பூரைச் சேர்ந்த தாமோதரன் என்பவரும் காயமடைந்தார். கார் ஓட்டுநர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.