விளம்பரம் கொடுப்பதில் தவறில்லை... அது அரசின் பணத்தில் அல்லாமல் அ.தி.மு.க. பணத்தில் இருக்க வேண்டும்: திருப்பூரில் கனிமொழி பேட்டி!

திருப்பூர்: அ.தி.மு.க. விளம்பரம் கொடுப்பதில் தி.மு.க.வுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் அரசின் பணத்தில் அல்லாமல் அ.தி.மு.க.வின் பணத்தில் கொடுக்க வேண்டும் என்று கனிமொழி கேட்டுக்கொண்டார்.


திருப்பூர்: அ.தி.மு.க. விளம்பரம் கொடுப்பதில் தி.மு.க.வுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் அரசின் பணத்தில் அல்லாமல் அ.தி.மு.க.வின் பணத்தில் கொடுக்க வேண்டும் என்றுகனிமொழி கேட்டுக்கொண்டார்.

`விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' எனும் தலைப்பில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தி.மு.க. மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி அமர்ஜோதி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போதுஅவர் கூறியதாவது:-

அந்நியச் செலவாணியை ஈட்டித்தரும் திருப்பூரில் அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக இல்லை. வேலை வாய்ப்புகள் அதிக அளவில் தரக்கூடிய பின்னலாடை தொழில் நிறைந்த திருப்பூரில் கொரோனாமற்றும் ஜி.எஸ்.டி.யால் பாதிக்கப்பட்டிருந்தபோது மாநில அரசும், மத்திய அரசும் உதவிகரமாக இல்லை.

அ.தி.மு.க. அரசின் குடிமராமத்து சாதனை என்பது ஏட்டளவில் மட்டுமே நடைபெற்றது. அ.தி.மு.க. விளம்பரம் கொடுப்பது தி.மு.க.வுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் அரசின் பணத்தில் அல்லாமல் அ.தி.மு.க.வின் பணத்தில் கொடுக்க வேண்டும். தி.மு.க. இதுவரை யாருக்கும் அடிமையாக இருந்ததில்லை. கொள்கை ரீதியாக முரண்பாடு ஏற்பட்டால் கூட்டணியிலிருந்து வெளியேறும் தைரியமும் தி.மு.க.வுக்கு இருக்கிறது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அறிவித்த முதல்வர் உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டது ஏன் என்பதை விளக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...