பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, டிராக்டரில் ஏற்றிவந்த சோளத்தட்டையில் மின்கம்பி உரசி தீ விபத்து ஏற்பட்டது. டிராக்டரை ஓட்டிவந்த விவசாயியின் கைகளில் தீக்காயம் ஏற்பட்டது.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, டிராக்டரில் ஏற்றிவந்த சோளத்தட்டையில் மின்கம்பி உரசி தீ விபத்து ஏற்பட்டது. டிராக்டரை ஓட்டிவந்த விவசாயியின் கைகளில் தீக்காயம் ஏற்பட்டது.
பொள்ளாச்சியை அடுத்த மோதிராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார். இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். பொள்ளாச்சி பகுதியிலிருந்து சோளத்தட்டையை டிராக்டரில்ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சி - மோதிராபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பிமீது உரசியதில் சோளத்தட்டை தீப்பிடித்து எரிந்தது. சுதாரித்துக்கொண்ட மதன்குமார் உடனடியாக டிராக்டரில் இருந்த சோளத் தட்டைகளை ரோட்டிலேயே கொட்டினார்.

தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் டிராக்டரை ஓட்டிவந்த மதன்குமாரின் இரண்டு கைகளிலும் தீக்காயம் ஏற்பட்டது. அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். டிராக்டரில் அளவுக்கு அதிகமான உயரத்தில் சோளத் தட்டைகளை ஏற்றி வந்ததால் மின் கம்பி மீது உரசி விபத்து ஏற்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொள்ளாச்சியை அடுத்த மோதிராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார். இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். பொள்ளாச்சி பகுதியிலிருந்து சோளத்தட்டையை டிராக்டரில்ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சி - மோதிராபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பிமீது உரசியதில் சோளத்தட்டை தீப்பிடித்து எரிந்தது. சுதாரித்துக்கொண்ட மதன்குமார் உடனடியாக டிராக்டரில் இருந்த சோளத் தட்டைகளை ரோட்டிலேயே கொட்டினார்.
தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் டிராக்டரை ஓட்டிவந்த மதன்குமாரின் இரண்டு கைகளிலும் தீக்காயம் ஏற்பட்டது. அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். டிராக்டரில் அளவுக்கு அதிகமான உயரத்தில் சோளத் தட்டைகளை ஏற்றி வந்ததால் மின் கம்பி மீது உரசி விபத்து ஏற்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.