நாட்டுக்கோழி நிறுவனம் நடத்தி 17. 68 லட்சம் மோசடி செய்த கணவன் மனைவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

கோவை: நாட்டுக்கோழி வளர்ப்பு நிறுவனம் நடத்தி 17.68 லட்சம் ரூபாய் மோசடி செய்த கணவன், மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கோவை: நாட்டுக்கோழி வளர்ப்பு நிறுவனம் நடத்தி 17.68 லட்சம் ரூபாய் மோசடி செய்த கணவன், மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த பெத்தாம்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்லமணி (42). அவரது கணவர் ராமலிங்கம் (47). இருவரும் இணைந்து கே.பி.ஆர்.எஸ் பவுல்டரி பார்ம்ஸ் என்ற பெயரில் நாட்டுக்கோழி வளர்ப்பு நிறுவனத்தை 2016-ம் ஆண்டு தொடங்கினர்.

இந்த நிறுவனத்தில், 1.50 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், ஷெட் அமைத்து, 200 நாட்டு கோழிக்குஞ்சுகளை அளிப்பதுடன் மாதம் தோறும் 6,000 ரூபாய் வீதம் 36 மாதங்களுக்கு பராமரிப்பு செலவு அளிக்கப்படும் எனவும் ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் கவர்ச்சிகரமாக திட்டங்களை அறிவித்து விளம்பரம் செய்தனர்.

இதனை நம்பி 9 பேர் மொத்தம் சுமார் 17.68 லட்சம் ரூபாய் அளவுக்கு முதலீடு செய்தனர். ஆனால், அறிவித்தபடி பராமரிப்பு செலவு, ஊக்கத்தொகை உள்ளிட்டவற்றை வழங்கவில்லை. இதையடுத்து, சங்ககிரியை அடுத்த அம்மாபாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்லமணி, ராமலிங்கம் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட கணவன்,மனைவி இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் 10.18 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, அதில் 10 லட்சம் ரூபாயை முதலீட்டாளர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும், என நீதிபதி ஏ.எஸ்.ரவி உத்தரவிட்டார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...