சர்ச்சை பேச்சு: பாஜக கல்யாணராமன் மீது கடந்த மூன்று ஆண்டுகளில் 9 வழக்குகள் பதிவு - குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்படாதது ஏன்?

கோவை: கல்யாணராமன் மீது கடந்த மூன்று ஆண்டுகளில் மத கலவரத்தினை தூண்டும் வகையில் 9 வழக்குகள் பதியப்பட்ட நிலையில் ஏன் இன்னும் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்படவில்லை என கேள்வி எழுந்துள்ளது.


கோவை: கல்யாணராமன் மீது கடந்த மூன்று ஆண்டுகளில் மத கலவரத்தினை தூண்டும் வகையில் 9 வழக்குகள் பதியப்பட்ட நிலையில் ஏன் இன்னும் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்படவில்லை என கேள்வி எழுந்துள்ளது.

பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக இருப்பவர் கல்யாணராமன். இவர் கடந்த மாதம் 31-ம் தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து இஸ்லாமிய அமைப்பினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, கல்யாணராமன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், கல்யாணராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை பெரம்பூரைச் சேர்ந்த முகமது கவுஸ் என்பவர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, கல்யாணராமன் மீது பிற மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்துதல் உட்பட 4 பிரிவுகளின்கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கல்யாணராமன் மீது கடந்த மூன்று ஆண்டுகளில் மத கலவரத்தினை தூண்டும் வகையில் 9 வழக்குகள் பதியப்பட்ட நிலையில் ஏன் இன்னும் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்படவில்லை என்று கேள்வி எழுந்துள்ளது.

கல்யாணராமன் மீது கடந்த மூன்று ஆண்டுகளில் பதியப்பட்ட வழக்குகளின் விபரம் பின் வருமாறு:

1. சென்னை பழைய வண்ணாரபேட்டை கா.நி. குற்ற எண் 490/18 U / s 153 (A) , (1) (a) , 153(1)(b), 295 (A) , 505 (i) , (b) (c) , 505 (2) IPC.

2. தஞ்சாவூர் மாவட்டம் திறுவையாறு கா.நி. குற்ற எண் 302/2018 U / s 294 (b) , 153 ipc , 167 IT ACT .

3. சென்னை குற்ற பிரிவு சென்னை நகர காவல் நிலைய குற்ற எண் 339/2019 ச / பி 153 (A)(1) (a) , 153 (A) (1) (b) , 295 (A) , 504 , 505 (I) (b) , 505(2) IPC.

4. சென்னை மாநகர மத்திய குற்ற பிரிவு குற்ற எண் 60/2020 ச / பி 153 (A) , 504 , 505 (1) (b)IPC.

5. சென்னை மாநகர குற்றப் பிரிவு குற்ற எண்.152/2020, u/s.153(a), 504, 505(1)(b) IPC.

6. திருவண்ணாமலை மாவட்ட நகர கா.நி. குற்ற எண்.1941/2020 u/s.153 ( A), 295 (A) , 504 , 505(2) IPC.

7. சென்னை மாநகர மத்திய குற்ற பிரிவு குற்ற எண் 98/2020 ச / பி 153 (A) (1)(a), 153(1)(b), 504 , 505 (1) (b),505(1)(c), 506(1) IPC.

8. கோவை குனியமுத்தூர் கா.நி. குற்ற எண் 1119/2018 u/s.153(A), 505(2) IPC.

9. மேட்டுப்பாளையம் கா.நி. குற்ற எண்.109/2021 u/s 147, 148, 149, 504, 505(2), 153 A, 153 B, 269, 307 of IPC.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...