திருப்பூரில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் எனும் தலைப்பில் கனிமொழி எம்.பி பிரச்சாரம்!

திருப்பூர்: விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் எனும் தலைப்பில் திமுகவின் மகளிர் அணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடந்த 2 தினங்களாக திருப்பூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.


திருப்பூர்: விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் எனும் தலைப்பில் திமுகவின் மகளிர் அணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடந்த 2 தினங்களாக திருப்பூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக, இன்று திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அவிநாசி மற்றும் பல்லடம் சட்டமன்ற தொகுதிகளில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது பேசிய அவர், ரேஷன் கடைகளில் தரமில்லாத மோசமான பொருட்களை வழங்குவதாக பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர். நியாய விலைக்கடைகள் நியாய விலைக்கடைகளாக செயல்படுவதில்லை. மருத்துவக் கல்லூரிகள் ஆட்சியில் இருப்பவர்களால் தான் முன்னெடுப்பு எடுக்கப்பட்டு கொண்டு வர முடியும்., எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு வருடம் ஆகியும் பணி துவங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.

மேலும், தமிழக நலன் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து திமுக குரல் எழுப்பி வருகிறது. 10 வருட காலமாக திமுக ஆட்சியில் இல்லாததால் பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருவதாக கூறிய அவர், 10 வருட காலமாக ஆட்சியில் இருந்து தற்போது குறைதீர்க்கும் மையம், இலவச தொலைபேசி எண் அறிவிக்க காரணம் என்ன 7 தமிழர் விடுதலை விவகாரத்தில் கருணாநிதி அவர்களின் ஆட்சிக் காலத்திலிருந்து தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால், அவர்களை விடுதலை செய்யக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றிய அதிமுக அரசு பொய்யான தகவலை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறது. பிரதமர் நாடாளுமன்றத்தில் விவசாயிகளுக்காக பேசுவது போல அல்லாமல் அவர்களின் கோரிக்கையான 3 சட்டதிருத்த மசோதாவினை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...