இரும்பு, சிமெண்ட் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து 12ம் தேதி நடைபெறும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு கோவை மத்திய சங்கங்களின் கூட்டுகுழு ஆதரவு!

கோவை: இரும்பு, சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வுக்கு மத்திய மாநில அரசுகளை தீர்வு காண வலியுறுத்தி 8 கட்டுமான நிறுவன அமைப்புகள் சார்பில் 12-02-2021 அன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை கோவை மத்திய சங்கங்களின் கூட்டுகுழு ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது.


கோவை: இரும்பு, சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வுக்குமத்திய மாநில அரசுகளை தீர்வு காண வலியுறுத்தி 8 கட்டுமான நிறுவன அமைப்புகள் சார்பில் 12-02-2021 அன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை கோவை மத்திய சங்கங்களின் கூட்டுகுழு ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது.

மத்திய மாநில அரசுகளின் கார்பரேட்டு ஆதரவு கொள்கைகளால் கட்டுமான துறையின் அடிப்படை பொருட்களான இரும்பு, சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. இதனால் கட்டுமான தொழில், இத்தொழிலை நம்பி பிழைக்கும் தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.

மத்திய அரசு முன்பே நடைமுறை படுத்திருக்கும் பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜீஎஸ்டி வரி கட்டமைப்பு, கொரோனா கால மறுசீரமைப்பு பணிகள் செய்யாதது உள்ளிட்ட காரணங்களால் கட்டுமான துறை சிக்கி சீர் அழிந்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது இரும்பு டன் ஒன்றுக்கு 35 ஆயிரத்திலிருந்து 65 ஆயிரமாக உயர்வு, சிமெண்ட் மூட்டை ஒன்றுக்கு 280 ரூபாயிலிருந்து 420 ரூபாயாக உயர்வு இதர பொருட்கள் 20% வரை உயர்ந்துள்ளது.

மேலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள், நிறுவன ஊழியர்கள், கட்டுமான தொழிலாளர்கள், வடமாநில தொழிலாளர்கள் வேலையின்றி வருமானம் இன்றி துயரத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

இதனிடையே, மத்திய மாநில அரசுகளை தீர்வு காண வலியுறுத்தி 8 கட்டுமான நிறுவன அமைப்புகள் சார்பில் 12-02-2021 அன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை கோவை மத்திய சங்கங்களின் கூட்டுகுழு ஆதரிக்கிறது. மேலும் மத்திய தொழிற்சங்களின் போராட்டங்கள் விரைவில் நடைபெறும் என்பதை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...