கோவை: கைதாகி சிறையில் உள்ள கல்யாணராமன் பேஸ்புக்கில் அவதூறு கருத்து வெளியிட்டதற்காக அவரை கோவை போலீஸ் மீண்டும் கைது செய்துள்ளது.
கோவை: கைதாகி சிறையில் உள்ள கல்யாணராமன் பேஸ்புக்கில் அவதூறு கருத்து வெளியிட்டதற்காக அவரை கோவை போலீஸ் மீண்டும் கைது செய்துள்ளது.
கோவை மேட்டுப்பாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டனக் கூட்டத்தில் மதம் சார்ந்து அவதூறாக பேசியதாக பாரதிய ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய ஜாமீன் மனுஇரண்டாவது முறையாக நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த மீண்டும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடந்தபோது, பிற மதத்தினர் குறித்து பேஸ்புக்கில் அவதுாறு கருத்து வெளியிட்டதாக கல்யாணராமன் மீது கடந்தாண்டு மார்ச் மாதம் 20-ந்தேதி புகார் செய்யப்பட்டிருந்தது. இந்த புகார் குறித்து ரத்னபுரி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதையடுத்து பேஸ்புக் மூலமாக அவதூறு பரப்பியதற்காக நேற்று அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.