கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் பேருந்துகள் மிகவும் குறைவாக இயக்கப்படுவதால் பள்ளி செல்லும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர். இதுபோன்ற ஆபத்தான பயணத்தைத் தடுக்க உடனடியாக பேருந்துகளை இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறைபகுதியில் பேருந்துகள் மிகவும் குறைவாக இயக்கப்படுவதால் பள்ளி செல்லும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர். இதுபோன்ற ஆபத்தான பயணத்தைத் தடுக்க உடனடியாக பேருந்துகளை இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறையில், குறைவான பஸ்கள் இயக்கப்படுவதால் அரசு பஸ்களில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் கோவை, பொள்ளாச்சி, பழநி, திருப்பூர் மற்றும் எஸ்டேட் பகுதிகளுக்கு 44 அரசு பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால், மாணவர்கள் நலன் கருதி மீண்டும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான வழித்தடங்களில் மிகக் குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்படுவதால் மாணவர்கள் கூட்ட நெரிசலில் பயணம் செய்ய முடியாத நிலையில், படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர்.
இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறையில் எஸ்டேட் பகுதிகளுக்கு, குறைவான எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படுவதால் மாணவர்கள் பயணம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். மலைப்பாதையில் வளைந்து நெளிந்து செல்லும் ரோட்டில், மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்வதால், விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வால்பாறை நகரிலிருந்து எஸ்டேட் பகுதிகளுக்கு வழக்கம்போல் அனைத்து வழித்தடங்களிலும் பஸ்களை இயக்க வேண்டும்,' என்றனர்.
வால்பாறையில், குறைவான பஸ்கள் இயக்கப்படுவதால் அரசு பஸ்களில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் கோவை, பொள்ளாச்சி, பழநி, திருப்பூர் மற்றும் எஸ்டேட் பகுதிகளுக்கு 44 அரசு பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால், மாணவர்கள் நலன் கருதி மீண்டும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான வழித்தடங்களில் மிகக் குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்படுவதால் மாணவர்கள் கூட்ட நெரிசலில் பயணம் செய்ய முடியாத நிலையில், படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர்.
இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறையில் எஸ்டேட் பகுதிகளுக்கு, குறைவான எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படுவதால் மாணவர்கள் பயணம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். மலைப்பாதையில் வளைந்து நெளிந்து செல்லும் ரோட்டில், மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்வதால், விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வால்பாறை நகரிலிருந்து எஸ்டேட் பகுதிகளுக்கு வழக்கம்போல் அனைத்து வழித்தடங்களிலும் பஸ்களை இயக்க வேண்டும்,' என்றனர்.