கோவை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சென்னை இல்லத்திற்கும் சேலத்தில் உள்ள வீட்டிற்கும் செல்போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சேலத்தில் உள்ள வீட்டில் சோதனை நடத்தினர். அதேபோல, சென்னையிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், இதுதொடர்பாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த திருப்பூர் மாவட்டம் கரடிவாவி பகுதியைச் சேர்ந்த நபரை பிடித்து போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், அவருடன் இருந்த மற்றொரு நபர் அங்கிருந்து தப்பி கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து திருப்பூர் மாவட்ட போலீசாரும் கருமத்தம்பட்டி போலீசாரும் இணைந்து செல்போன் சிக்னல் மூலம் தலைமறைவாக உள்ள நபரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சென்னை இல்லத்திற்கும் சேலத்தில் உள்ள வீட்டிற்கும் செல்போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சேலத்தில் உள்ள வீட்டில் சோதனை நடத்தினர். அதேபோல, சென்னையிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், இதுதொடர்பாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த திருப்பூர் மாவட்டம் கரடிவாவி பகுதியைச் சேர்ந்த நபரை பிடித்து போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், அவருடன் இருந்த மற்றொரு நபர் அங்கிருந்து தப்பி கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து திருப்பூர் மாவட்ட போலீசாரும் கருமத்தம்பட்டி போலீசாரும் இணைந்து செல்போன் சிக்னல் மூலம் தலைமறைவாக உள்ள நபரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.