கோவை: கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்த வாலிபரை போலீசார் பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்த வாலிபரை போலீசார் பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து விற்பனை செய்யப்படும் கஞ்சா போதைப் பொருட்களை தடை செய்யும் விதமாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம்.
அந்த வகையில் செல்வபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சின்னதுரை தலைமையில் போலீசார் நேற்று மதியம் சொக்கம்புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்கள் வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சொக்கம்புதூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்ராஜ் என்கிற செல்போன் செந்தில் (37) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து விற்பனை செய்யப்படும் கஞ்சா போதைப் பொருட்களை தடை செய்யும் விதமாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம்.
அந்த வகையில் செல்வபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சின்னதுரை தலைமையில் போலீசார் நேற்று மதியம் சொக்கம்புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்கள் வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சொக்கம்புதூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்ராஜ் என்கிற செல்போன் செந்தில் (37) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.