மூலப்பொருள் விலையேற்றத்தால் மோட்டார் பம்ப்செட் தொழில் பாதிப்பு: விலையைக் கட்டுப்படுத்த அரசுக்கு கோவை தொழில்முனைவோர் கோரிக்கை!

கோவை: மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால் மோட்டார் பம்ப்செட் தொழில்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதால் விலையைக் கட்டுப்படுத்துமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு கோவை தொழில்முனைவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால் மோட்டார் பம்ப்செட் தொழில்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதால் விலையைக் கட்டுப்படுத்துமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு கோவை தொழில்முனைவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில், 3,000-க்கும் மேற்பட்ட சிறு, குறு மோட்டார் பம்ப்செட் உற்பத்தியாளர்கள் உள்ளனர். இவர்களை நம்பி, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்டர் எடுத்து தொழில் நடத்தி வருகின்றனர். தொழிற்சாலை, வீடு, விவசாயம் என பல்வேறு தேவைகளுக்கு மோட்டார் பம்ப்செட்கள் இங்கிருந்து உற்பத்தியாகின்றன. தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களுக்கு கோவையில் இருந்துதான் மோட்டார் பம்ப் செட்கள் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

சமீபகாலமாக, மூலப்பொருட்களின் தொடர் விலையேற்றம், ஆட்கள் பற்றாக்குறை போன்றவை இதன் உற்பத்தியை பாதியாகக் குறைந்துவிட்டது. மோட்டார் பம்ப் செட் தொழிலுக்கு முக்கிய மூலதனமான 'காப்பர் ஸ்டீல் ராடு, காந்த அலை தகடுகள் எனும் ஸ்டாம்பிங், பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றின் விலை, தற்போது, 20 சதவீதம் கூடியுள்ளதால், தொழில் நடத்த முடியாமல் சிறு, குறு பம்ப்செட் உற்பத்தியாளர்கள் திணறுகின்றனர்.

தற்போது நல்ல மார்க்கெட் இருந்தும் மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தாலும் ஆட்கள் பற்றாக்குறையாலும் தினந்தோறும் 30 சதவீத அளவுக்கு உற்பத்தி பாதிக்கப்படுவதாக சிறு மற்றும் குறு தொழில்முனைவோர் கூறுகின்றனர்.மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து மூலப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...