ஈமு கோழி மோசடி: சுசி நிறுவன சொத்துகளை ஏலமிட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்க கோர்ட் உத்தரவு!

கோவை: சுசி ஈமு என்ற பெயரில் பல கோடி மோசடி செய்த நிறுவனத்தின் சொத்துக்களை உடனடியாக ஏலம் விட்டு அதன் தொகையை முதலீட்டாளர்களுக்கு பிரித்துக் கொடுக்க டான்பிட் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.


கோவை: சுசி ஈமு என்ற பெயரில் பல கோடி மோசடி செய்த நிறுவனத்தின் சொத்துக்களை உடனடியாக ஏலம் விட்டு அதன் தொகையை முதலீட்டாளர்களுக்கு பிரித்துக் கொடுக்க டான்பிட் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்த குருசாமி, 'சுசி ஈமு பார்ம்' என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். ஈமு கோழி வளர்ப்பதற்கு வாடிக்கையாளர்களிடம், 200 கோடி ரூபாய் டெபாசிட் பெற்று பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்ததாக குருசாமியும், அவரது மனைவியும், 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது, கோவை, 'டான்பிட்' கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட சொத்துக்களை ஏலமிடக்கோரி, அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பெருந்துறையில் உள்ள, சுசி ஈமு நிறுவன சொத்துக்களை ஏலமிட நீதிபதி ரவி உத்தரவிட்டார். அத்துடன் ஏலம் விட்ட தொகையை முதலீட்டாளர்களுக்கு பிரித்துக் கொடுக்கவும் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...