அடுக்கி வைத்திருந்த மரக்கட்டைகள் உருண்டு விழுந்து, கடை உரிமையாளர் பரிதாப சாவு

கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள கணபதி நகரைச் சேர்ந்தவர் அணில் குமார் (வயது 58). இவர் கக்கன் நகரில் சொந்தமாக மரக்கடை வைத்து நடத்தி வருகிறார்.


கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள கணபதி நகரைச் சேர்ந்தவர் அணில் குமார் (வயது 58). இவர் கக்கன் நகரில் சொந்தமாக மரக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

நேற்று மாலை கடையிலிருந்து அனில்குமார் சவுக்கு மரக் கட்டைகளை விற்பனை செய்வதற்காக அடுக்கி வைத்து கொண்டு இருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அடுக்கி வைத்திருந்த மரக்கட்டைகள் ஒன்றன் பின் ஒன்றாக சரிந்து விழுந்தது. இதில், சிக்கிக்கொண்ட அனில்குமார் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிய நிலையில், அவரை அங்கு வேலை செய்த ஊழியர்கள் கட்டைகளுக்குள் இருந்து மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அனில் குமாரை, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் 176 வது சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...