கோவை: வேலை கிடைக்காமல் பலர் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதேநேரத்தில் வேலை காலியாக இருந்தும் அந்த இடத்தில் சேர்வதற்கு ஆட்கள் வரவில்லை.கோவை மாநகராட்சி இளநிலை உதவியாளர் பதவிக்கான நேர்காணலில் பங்கேற்காமல் 214 பேர் ஆப்சென்ட் ஆனதாகக் கூறப்படுகிறது.
கோவை: வேலை கிடைக்காமல் பலர் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதேநேரத்தில் வேலை காலியாக இருந்தும் அந்த இடத்தில் சேர்வதற்கு ஆட்கள் வரவில்லை. கோவை மாநகராட்சி இளநிலை உதவியாளர் பதவிக்கான நேர்காணலில் பங்கேற்காமல் 214 பேர் ஆப்சென்ட் ஆனதாகக் கூறப்படுகிறது.
கோவை மாநகராட்சியில், 103 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இதில், 34 பணியிடங்கள், சீனியாரிட்டி அடிப்படையில் துப்புரவு மேற்பார்வையாளர்கள்/ பதிவுரு எழுத்தர்கள்/ டிரைவர்களுக்கு வழங்கப்பட்டன. மீதமுள்ள 69 பணியிடங்களுக்கான நேர்காணல் டாடாபாத் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. மொத்தம் 654 பேருக்கு நேர்காணல் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
உதவி கமிஷனர்கள் முருகன், சுந்தர்ராஜன், செந்தில்குமார் ரத்தினம், ரவி, அண்ணாதுரை ஆகியோர் தலைமையிலான குழுவினர் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களை சரிபார்த்தனர். நேர்காணலில் 440 பேர் பங்கேற்ற நிலையில் 214 பேர் நேர்காணலுக்கு வரவில்லை. இதற்கிடையே, சீனியாரிட்டியில் விடுபட்டோருக்கு இளநிலை உதவியாளர் பணியிடம் வழங்கக்கோரி, கமிஷனரிடம் சிலர் மனு கொடுத்தனர். துப்புரவு மேற்பார்வையாளர்களில் 4 பேர், தங்களுக்கு இளநிலை உதவியாளர் பணி வேண்டாம் என்று கடிதம் கொடுத்துள்ளனர்.
கோவை மாநகராட்சியில், 103 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இதில், 34 பணியிடங்கள், சீனியாரிட்டி அடிப்படையில் துப்புரவு மேற்பார்வையாளர்கள்/ பதிவுரு எழுத்தர்கள்/ டிரைவர்களுக்கு வழங்கப்பட்டன. மீதமுள்ள 69 பணியிடங்களுக்கான நேர்காணல் டாடாபாத் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. மொத்தம் 654 பேருக்கு நேர்காணல் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
உதவி கமிஷனர்கள் முருகன், சுந்தர்ராஜன், செந்தில்குமார் ரத்தினம், ரவி, அண்ணாதுரை ஆகியோர் தலைமையிலான குழுவினர் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களை சரிபார்த்தனர். நேர்காணலில் 440 பேர் பங்கேற்ற நிலையில் 214 பேர் நேர்காணலுக்கு வரவில்லை. இதற்கிடையே, சீனியாரிட்டியில் விடுபட்டோருக்கு இளநிலை உதவியாளர் பணியிடம் வழங்கக்கோரி, கமிஷனரிடம் சிலர் மனு கொடுத்தனர். துப்புரவு மேற்பார்வையாளர்களில் 4 பேர், தங்களுக்கு இளநிலை உதவியாளர் பணி வேண்டாம் என்று கடிதம் கொடுத்துள்ளனர்.