இன்னும் 2 வாரங்கள் கோவையில் கடும் குளிர், பனிப்பொழிவு: வானிலை ஆராய்ச்சியாளர் தகவல்!

கோவை: இன்னும் 2 வாரங்கள் கோவையில் கடும் குளிர், பனிப்பொழிவு நிலவும் என வானிலை ஆராய்ச்சியாளர் சந்தோஷ்கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: இன்னும் 2 வாரங்கள் கோவையில் கடும் குளிர், பனிப்பொழிவு நிலவும் என வானிலை ஆராய்ச்சியாளர் சந்தோஷ்கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொஞ்சம் கொஞ்சமாக குளிரின் தாக்கம் குறைந்து கோடை வெப்பம் ஆரம்பிக்கத் தொடங்கி உள்ளது. ஆனால் கோவையில் மட்டும் குளிர் வாட்டி வதைக்கிறது. இதுகுறித்து வானிலை ஆராய்ச்சியாளர் சந்தோஷ்கிருஷ்ணன் கூறியதாவது:-

கடல்சார்ந்த அலை நம் பகுதிக்கு வராத காரணத்தால், கடந்த இரு வாரங்களாக, கோவையில் வறண்ட வானிலை நிலவியது. இன்னும் இரு வாரங்களுக்கு தமிழகம் முழுவதும் வறண்ட வானிலையே தொடரும். வரும் நாட்களில், வட மாநிலங்களில் உயர் அழுத்தத்தில் இருந்து வரும் குளிர்ந்த வறண்ட காற்று, தமிழக நிலப்பரப்பில் ஊடுருவி, இரவு நேரங்களில் குளிர்ந்த காலநிலை உருவாக்கும். இன்னும் இரண்டு வாரத்துக்கு கோவை மற்றும் வட மாவட்டங்களில் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு இருக்கும். மார்ச் மாதம் அடுத்த சுற்று மழையை எதிர்பார்க்கலாம்.

கிழக்கு மற்றும் மேற்கு காற்றில் முறிவு ஏற்பட்டு, கேரளா மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களுக்கு, வெப்பச்சலன மழை இந்த வருடம் முன் கூட்டியே, துவங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...