கோவை: பொள்ளாச்சி அருகே சின்னாம்பாளையம் ஊராட்சியில் குடியிருப்புக்கு அருகில் அமைக்கப்பட்டு வரும் குப்பை கிடங்கை அப்புறப்படுத்தக் கோரி பொதுமக்கள் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே சின்னாம்பாளையம் ஊராட்சியில் குடியிருப்புக்கு அருகில் அமைக்கப்பட்டு வரும் குப்பை கிடங்கை அப்புறப்படுத்தக் கோரி பொதுமக்கள் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம்பாளையம் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதனிடையே, குடியிருப்புகள் மிகுந்த சின்னாம்பாளையம் ஊராட்சியில் 6வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், புதிதாக அமைக்கப்படும் குப்பை கிடங்கிற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் இன்று சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
சின்னாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 6வது வார்டு குடியிருப்பு பகுதியில் உள்ள, பார்க் சைட்டில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பிரிவு, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மீண்டும் அந்த பகுதியில் குப்பை கிடங்கு அமைப்பதற்கான பணி தொடங்கியுள்ளது. இதுகுறித்து அங்கு பணியாற்றும் நபர்களிடம் கேட்டபோது, ஆட்சியர் மற்றும் அரசின் உத்தரவுப்படி பணி செய்வதாக கூறியுள்ளனர். எனவே, அதிகாரிகள் தலையிட்டு அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம்பாளையம் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதனிடையே, குடியிருப்புகள் மிகுந்த சின்னாம்பாளையம் ஊராட்சியில் 6வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், புதிதாக அமைக்கப்படும் குப்பை கிடங்கிற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் இன்று சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
சின்னாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 6வது வார்டு குடியிருப்பு பகுதியில் உள்ள, பார்க் சைட்டில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பிரிவு, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மீண்டும் அந்த பகுதியில் குப்பை கிடங்கு அமைப்பதற்கான பணி தொடங்கியுள்ளது. இதுகுறித்து அங்கு பணியாற்றும் நபர்களிடம் கேட்டபோது, ஆட்சியர் மற்றும் அரசின் உத்தரவுப்படி பணி செய்வதாக கூறியுள்ளனர். எனவே, அதிகாரிகள் தலையிட்டு அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.