விருப்பப்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வரலாம், அச்சம் தேவையில்லை: திருப்பூரில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

திருப்பூர்: விருப்பப்பட்ட மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வரலாம் என்று கூறியுள்ளதால் அச்சம் தேவையில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.


திருப்பூர்: விருப்பப்பட்ட மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வரலாம் என்று கூறியுள்ளதால் அச்சம் தேவையில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் பகுதியில் துவக்கப் பள்ளியை தரம் உயர்த்தி நடுநிலைப்பள்ளியாக மாற்றப்பட்ட நிலையில் அதன் துவக்க விழா இன்று நடைபெற்றது. விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், `கடன் தள்ளுபடி போன்ற விஷயங்கள் விவசாயிகள் நலன் கருதி தேர்தல் நேரங்களில் மட்டும்தான் அறிவிப்பது வழக்கம், ஆனால் சட்டமன்றத்திலேயே முதல்வர்அதை அறிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு என்பது இந்தியாவே வியந்த ஒன்றாகும். வறட்சி நிலங்களில் குடிமராமத்துப் பணிகள், அத்திக்கடவு அவிநாசி போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது' என்றார். அப்போது அவரிடம், சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்றுஏற்படுவது குறித்த கேள்விக்கு, `பள்ளிகள் நடைபெற வேண்டும், மாணவர்களின் கல்வி சிறக்க வேண்டும். அதேநேரத்தில் விருப்பப்பட்ட மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வரலாம் என்று கூறியுள்ளதால் அச்சம் தேவையில்லை' என்று கூறினார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...