பந்தலூரில் பதற்றத்தை உருவாக்கும் ஒற்றைக் கொம்பன் யானையைப் பிடிக்க 5 கும்கி யானைகள் வரவழைப்பு!

கோவை: நீலகிரி மாவட்டம் பந்தலூரில் பதற்றத்தை உருவாக்கும் யானையைப் பிடிக்க 5 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. பந்தலுாரில் சுற்றி வரும் ஒற்றைக் கொம்பன் யானையை பிடிக்க ஐந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.


கோவை: நீலகிரி மாவட்டம் பந்தலூரில் பதற்றத்தை உருவாக்கும் யானையைப் பிடிக்க 5 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. பந்தலுாரில் சுற்றி வரும் ஒற்றைக் கொம்பன் யானையை பிடிக்க ஐந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டம், சேரம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் மூன்று பேரை ஒற்றைக் கொம்பன் யானை தாக்கிக் கொன்றது. இந்த யானையைப் பிடிப்பதற்காக நடவடிக்கை எடுத்தபோது, கேரள வனப்பகுதிக்குள் சென்றது. தற்போது, மீண்டும் சேரம்பாடி பகுதிக்கு வந்துள்ளதால் யானையைப் பிடிக்கும் பணி துவக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் யானைகளைப் பிடிக்கும் பணியில் சிறப்பாக ஈடுபட்ட உதவி வனப் பாதுகாவலர்கள் தினேஷ் மற்றும் ராஜேஷ் தலைமையிலான 11 பேர் கொண்ட சிறப்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கோவை மண்டல முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அன்வர்தீன் கூறும்போது, `மொத்தம் ஐந்து கும்கி யானைகள் உதவியுடன் யானையைப் பிடிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. முழுமையான ஆய்வுக்குப் பிறகு வரும் 7-ம் தேதி மயக்க ஊசி செலுத்தி, யானையைப் பிடிக்கும் பணி மேற்கொள்ளப்படும். மக்கள் அச்சப்படத் தேவையில்லை' என்றார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...