எம் எல் ஏ கார்த்திக் மீது வழக்கு: நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு

கோவை: கோவை மாநகராட்சி தனி அலுவலர் கடந்த 3 ஆண்டுகளாக நிறைவேற்றப்பட்ட நாலாயிரத்துக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் எதுவும் மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படாத மர்மம் என்ன? என்று கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கார்த்திக் எம்எல்ஏ தனது அறிக்கை மூலமாக கேள்வி எழுப்பியிருந்தார்.


கோவை: கோவை மாநகராட்சி தனி அலுவலர் கடந்த 3 ஆண்டுகளாக நிறைவேற்றப்பட்ட நாலாயிரத்துக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் எதுவும் மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படாத மர்மம் என்ன? என்று கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கார்த்திக் எம்எல்ஏ தனது அறிக்கை மூலமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இது தொடர்பாக, கோவை ஆலயம் பவுண்டேஷன் நிறுவனரும், இயக்குனர் தங்கராஜ் என்பவர் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். அதில், மாநகராட்சி பணிகள் தொடர்பாக கார்த்திக் எம்எல்ஏ விமர்சனம் செய்யும் போது என்னையும் சேர்த்து அவதூறாக விமர்சனம் செய்துள்ளார், எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக விசாரித்த குனியமுத்தூர் போலீசார் கார்த்திக் எம்எல்ஏ -வை இந்திய தண்டனைச் சட்டம் 153, 504, 505 (I)பி ஆகிய 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி கார்த்திக் எம்எல்ஏ கோவை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது மனுவை விசாரித்த நீதிபதி, கார்த்திக் எம்எல்ஏ தினமும் காலை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...