கோவையில், குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்: ரயில்வே போலீசார் தடுத்து மீட்டனர்!

கோவை: கோவையில் இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்வதற்காக ரயில்வே தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த பெண்ணை போலீசார் மீட்டனர். அத்துடன் அவர்கள் அனைவரையும் பத்திரமாக காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் கோவையில் நடைபெற்றது.


கோவை: கோவையில் இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்வதற்காக ரயில்வே தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த பெண்ணை போலீசார் மீட்டனர். அத்துடன் அவர்கள் அனைவரையும் பத்திரமாக காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் கோவையில் நடைபெற்றது.

கோவை ரயில்வே போலீசார் ரயில் தண்டவாளங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கோவை போத்தனூர் செல்லும் ரயில் தண்டவாள பகுதியில் ஒரு இளம் பெண் இரண்டு குழந்தைகளுடன் அமர்ந்திருந்தார். அதை பார்த்த போலீசார் அங்கு சென்று அந்த இளம்பெண்ணிடம் இங்கு குழந்தைகளுடன் அமர்ந்து இருக்கிறீர்கள் என்று கேட்டனர். அப்போது அந்த இளம்பெண் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த இளம்பெண்ணையும் இரண்டு குழந்தைகளையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மனைவி முருகம்மாள் (வயது 32) என்பதும், அவரது மகன்கள் லாரன்ஸ் (வயது 15) மற்றும் சரவணவேல் (வயது 5) என்பதும் தெரியவந்தது. வறுமையால் குழந்தைகளை வளர்க்க முடியாமல் குழந்தைகளுடன் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள வந்ததாக தெரிவித்தார்.

இதைக்கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து டி.எஸ்.பி. குணசேகரன் உத்தரவுப்படி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணலீலா அந்தப் பெண்ணை சமாதானப்படுத்தி குழந்தைகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தார். முருகம்மாளை கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூகநலத்துறை அலுவலர் தங்கமணியிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...