கோவையில், கேரளா போலீஸார் சோதனை; மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு குறித்து சந்தேகத்தின் பேரில் பல் மருத்துவர் கைது

கோவை: மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருந்ததாக, சந்தேகத்தின் பேரில் கோவையைச் சேர்ந்த பல் மருத்துவர் ஒருவரை கேரளா போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருந்ததாக, சந்தேகத்தின் பேரில் கோவையைச் சேர்ந்த பல் மருத்துவர் ஒருவரை கேரளா போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



இன்று காலை முதல், கேரளா அதிரடிப்படையினர் கோவையில் மூவரின் வீடுகளில் திடீரென சோதனை மேற்கொண்டதில், பல் மருத்துவர் ஒருவருக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு உள்ளதா? என்பதை உறுதி செய்ய அவர் கைது செய்யப்பட்டு கேரளாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.



மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் உள்ளவர்களை, சிறப்பு பிரிவு போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில், கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவரது வீடு, சுங்கம் பைபாஸ் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரது வீடு மற்றும் இடையர்பாளையம் பகுதியிலுள்ள மருத்துவமனை ஆகியவற்றில் சோதனை மேற்கொண்டனர்.

இதில், இடையர்பாளையம் பகுதியிலுள்ள மருத்துவமனையில் சோதனை செய்த கேரளா போலீசார் அங்கு வைத்து பல் மருத்துவர் தினேஷை கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து, கேரளா போலீசார் பல் மருத்துவரான தினேஷை கேரள மாநிலம் மலப்புரத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும், பல் மருத்துவர் தினேஷிடம் விசாரணை நடத்தினால் தான் அவருக்கு மாவோயிஸ்டுகளுக்கும் உள்ள தொடர்பு பற்றி தெரிய வரும், என போலீஸ் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...