கோவை: பி.எஸ்.என்.எல் பெயரில் போலி இணையதளம் உருவாக்கப்பட்டு பணம் பறிக்கப்படுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கோவை: பி.எஸ்.என்.எல் பெயரில் போலி இணையதளம் உருவாக்கப்பட்டு பணம் பறிக்கப்படுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல். சர்வீஸுக்கு ஆன்லைன் மூலம் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இவர்கள் டி.டி.எச். இணைப்பு வழங்குவதற்காக டீலர்களை நியமித்து மக்களை ஏமாற்றி ஆன்லைன் வழியாக பணம் பறிக்கின்றனர்.
பி.எஸ்.என்.எல். உள்ளத்தைப் போலவே உருவாக்கப்பட்ட இந்த போலி இணையதளங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது. வேலைவாய்ப்பு வர்த்தக அழைப்புகள் அனைத்தும் www.bsnl.co.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் ஏமாற வேண்டாம், மிகவும் கவனமாக இருக்கவும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.