கோவை: தொடர்ந்து இந்து முன்னணியினர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு கைது செய்யப்பட்டு வருவதாகவும், முறையான விசாரணை மேற்கொண்டு உண்மைத் தன்மையை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபி மற்றும் உள்துறை செயலாளருக்கு, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மனு அனுப்பியுள்ளார்.
கோவை: தொடர்ந்து இந்து முன்னணியினர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு கைது செய்யப்பட்டு வருவதாகவும், முறையான விசாரணை மேற்கொண்டு உண்மைத் தன்மையை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபி மற்றும் உள்துறை
செயலாளருக்கு, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மனு அனுப்பியுள்ளார்.
அந்த மனுவின் விவரம் வருமாறு:- கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் பல்வேறு இயக்கங்கள் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு பொதுமக்களின் உடமைக்கும் பொது அமைதிக்கு அச்சுறுத்தலாக பலகாலமாக இருந்து வருகிறார்கள். கடந்த 26ம் தேதி பாரதப் பிரதமர் மோடியை சித்தரித்து தெரு நாடகம் நடத்தி சில அமைப்புகள் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் வகையில் நிகழ்வு நடத்தினர்.
இதைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் மேட்டுப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் பேசிக் கொண்டிருந்த போது சில அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூட்டத்திற்குள் புகுந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மேற்படி சம்பவம் முழுவதும் போலீசார் மற்றும் உளவுத் துறையால் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து அழைத்துச் சென்று நிலைமையை சீர் செய்ய காவல்துறையினர் முயன்றனர். ஆனால், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கல்யாணராமன், சதீஷ்குமார், சதீஷ், ஜெகநாதன், தீனா, ஆனந்த், செந்தில்குமார் செங்கோடன் மற்றும் இந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார், வடக்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், வடக்கு மாவட்ட துணை தலைவர் தங்கவேல் ஆகியோர் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அந்த ஆர்ப்பாட்டத்திற்கும், இந்து முன்னணி இயக்கத்திற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும் நபர்கள் யாரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவே இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளை பரிசீலித்து இந்து முன்னணி நிர்வாகிகள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்யும்படி கேட்டுக் கொள்வதாக, அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செயலாளருக்கு, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மனு அனுப்பியுள்ளார்.
அந்த மனுவின் விவரம் வருமாறு:- கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் பல்வேறு இயக்கங்கள் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு பொதுமக்களின் உடமைக்கும் பொது அமைதிக்கு அச்சுறுத்தலாக பலகாலமாக இருந்து வருகிறார்கள். கடந்த 26ம் தேதி பாரதப் பிரதமர் மோடியை சித்தரித்து தெரு நாடகம் நடத்தி சில அமைப்புகள் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் வகையில் நிகழ்வு நடத்தினர்.
இதைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் மேட்டுப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் பேசிக் கொண்டிருந்த போது சில அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூட்டத்திற்குள் புகுந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மேற்படி சம்பவம் முழுவதும் போலீசார் மற்றும் உளவுத் துறையால் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து அழைத்துச் சென்று நிலைமையை சீர் செய்ய காவல்துறையினர் முயன்றனர். ஆனால், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கல்யாணராமன், சதீஷ்குமார், சதீஷ், ஜெகநாதன், தீனா, ஆனந்த், செந்தில்குமார் செங்கோடன் மற்றும் இந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார், வடக்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், வடக்கு மாவட்ட துணை தலைவர் தங்கவேல் ஆகியோர் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அந்த ஆர்ப்பாட்டத்திற்கும், இந்து முன்னணி இயக்கத்திற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும் நபர்கள் யாரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவே இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளை பரிசீலித்து இந்து முன்னணி நிர்வாகிகள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்யும்படி கேட்டுக் கொள்வதாக, அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.