பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
பொள்ளாச்சியில் பிரசித்திபெற்றது கோயில் மாரியம்மன் கோயில். ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தேர்த் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவின்போது பால் காவடி, பறவைக் காவடி உள்ளிட்ட நேர்த்திக்கடன்கள்களை பக்தர்கள் நிறைவேற்றுவார்கள்.

கொரோனா அச்சம் காரணமாக கோயில் திருவிழா நடத்துவதில் அரசு தாமதம் காட்டி வருகிறது. எனவே உடனடியாக பொள்ளாச்சி மாரியம்மன் கோயில் திருவிழாவை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இந்து முன்னணி கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- பொள்ளாச்சியில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோயிலில் இந்த ஆண்டு திருவிழா நடைபெறுமா என்ற ஐயம் எழுந்துள்ளது.கோயில் நிர்வாகம் இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை.
தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் திருவிழாக்கள் மற்றும் தேரோட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே நோய் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து பொள்ளாச்சி மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவை நடத்த அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் பிரசித்திபெற்றது கோயில் மாரியம்மன் கோயில். ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தேர்த் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவின்போது பால் காவடி, பறவைக் காவடி உள்ளிட்ட நேர்த்திக்கடன்கள்களை பக்தர்கள் நிறைவேற்றுவார்கள்.
கொரோனா அச்சம் காரணமாக கோயில் திருவிழா நடத்துவதில் அரசு தாமதம் காட்டி வருகிறது. எனவே உடனடியாக பொள்ளாச்சி மாரியம்மன் கோயில் திருவிழாவை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இந்து முன்னணி கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- பொள்ளாச்சியில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோயிலில் இந்த ஆண்டு திருவிழா நடைபெறுமா என்ற ஐயம் எழுந்துள்ளது.கோயில் நிர்வாகம் இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை.
தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் திருவிழாக்கள் மற்றும் தேரோட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே நோய் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து பொள்ளாச்சி மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவை நடத்த அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.