கோவை: கோவை ரயில் நிலையம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ சார்பாக இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இரயில்வே தனியார் மயமால் 7 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் ஆபாயம் உள்ளது.
கோவை: கோவை ரயில் நிலையம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ சார்பாக இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், ரயில்வே துறை மற்றும் ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளை தனியார் மயமாக்க கூடாது. 55 வயது நிரம்பிய, 30 வருட அனுபவமுள்ளவர்களை கட்டாய ஓய்வில் வீட்டுக்கு அனுப்பும் நடைமுறையை கைவிட வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும், போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஏற்பட்டது.
அனைவருக்கும் 2004ம் ஆண்டுக்கு முந்தைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். சம்பள வரம்பு எதுவும் இன்று இரவு பணிக்கு அலவன்ஸ் வழங்க வேண்டும். 252 ரயில்களை தனியாருக்கு தாரை வார்ப்பது, ரயில் நிலையங்களை தனியார் கொடுப்பது என்ற முடிவை கைவிட வேண்டும். தனியார் மயமால் 7 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் ஆபாயம் உள்ளது. தொழிலாளர்கள் நல சட்டம் என்ற பெயரால் நிரந்தர வேலைகளை பறிக்க கூடாது என்கிற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.