கோவையில், இணையதளக் குற்றங்கள் விசாரிக்க சைபர் கிரைம் போலீஸ் நிலையம்!

கோவை: கோவை மாவட்டத்தில் முதன்முறையாக இணையதளக் குற்றங்களை விசாரிக்க சைபர் கிரைம் போலீஸ் நிலையம் விரைவில் அமைக்கப்பட உள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் முதன்முறையாக இணையதளக் குற்றங்களை விசாரிக்க சைபர் கிரைம் போலீஸ் நிலையம் விரைவில் அமைக்கப்பட உள்ளது.

கோவை மாநகரில் சைபர் குற்றங்கள் என்று அழைக்கப்படும் இணையதளக் குற்றங்களை விசாரிக்க மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. ஆனால் கோவை மாநகரில் சைபர் குற்றங்கள் நடந்தால், அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களில்தான் புகார் செய்ய வேண்டும். அவர்கள் அந்தப் புகார்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சைபர் குற்றப்பிரிவு அனுப்பி விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

தற்போது கோவை புறநகரில் நடக்கும் இணையதளக் குற்றங்களை கண்டுபிடிப்பதற்கான சைபர் கிரைம் போலீஸ் நிலையம் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசு உத்தரவு வந்ததும் இந்த போலீஸ் நிலையம் விரைவில் செயல்படத் தொடங்கும். கோவை புறநகரில் சைபர் குற்றங்கள் குறித்து பெறப்படும் புகார்கள் இங்கு வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...