கோவை: கோவையில், கத்தியுடன் சுற்றித் திரிந்த கஞ்சா வியாபாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை: கோவையில் கத்தியுடன் சுற்றித் திரிந்த கஞ்சா வியாபாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த காமநாயக்கன்பாளையம் அறிவொளி நகர் பிரிவில் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் செல்ல முயன்றனர்.
இதையடுத்து சுதாரித்துக் கொண்ட போலீசார் அவர்களை சாமர்த்தியமாக மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் 3 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததையடுத்து போலீசார் அவர்களை சோதனை செய்தனர். இதில் அவர்கள் 3 பேரிடமும் கத்தி இருந்தது தெரியவந்தது.
கத்தியுடன் சுற்றித்திரிந்த அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பாண்டி (வயது 23), அருப்புக் கோட்டையைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 24), கோவை சாய்பாபா காலனி கே.கே.நகரைச் சேர்ந்த கமலேஷ் (வயது 22) என்பது தெரியவந்தஹ்டு. மேலும் அவர்கள் மூன்று பேரும் கஞ்சா வியாபாரிகள் என்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து 500 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களது கூட்டாளிகளான ரமேஷ், கார்த்திக் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.இவர்கள் 3 பேரும் எதற்காக கத்தியுடன் சுற்றித் திரிந்தார்கள்என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த காமநாயக்கன்பாளையம் அறிவொளி நகர் பிரிவில் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் செல்ல முயன்றனர்.
இதையடுத்து சுதாரித்துக் கொண்ட போலீசார் அவர்களை சாமர்த்தியமாக மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் 3 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததையடுத்து போலீசார் அவர்களை சோதனை செய்தனர். இதில் அவர்கள் 3 பேரிடமும் கத்தி இருந்தது தெரியவந்தது.
கத்தியுடன் சுற்றித்திரிந்த அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பாண்டி (வயது 23), அருப்புக் கோட்டையைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 24), கோவை சாய்பாபா காலனி கே.கே.நகரைச் சேர்ந்த கமலேஷ் (வயது 22) என்பது தெரியவந்தஹ்டு. மேலும் அவர்கள் மூன்று பேரும் கஞ்சா வியாபாரிகள் என்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து 500 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களது கூட்டாளிகளான ரமேஷ், கார்த்திக் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.இவர்கள் 3 பேரும் எதற்காக கத்தியுடன் சுற்றித் திரிந்தார்கள்என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.