கோவை: கோவை மலுமிச்சம்பட்டி அருகே உள்ள அன்பு நகரைச் சேர்ந்தவர் தியாகு (40), எலக்ட்ரீசியன். இவருக்கு ராம குரு (15), ஸ்ரீ சங்கர் என்ற மகன்கள் இருந்தனர். ராமகுரு 10-ஆம் வகுப்பு, ஸ்ரீ சங்கர் நான்காம் வகுப்பு படித்து வந்தனர்.
கோவை: கோவை மலுமிச்சம்பட்டி அருகே உள்ள அன்பு நகரைச் சேர்ந்தவர் தியாகு (40), எலக்ட்ரீசியன். இவருக்கு ராம குரு (15), ஸ்ரீ சங்கர் என்ற மகன்கள் இருந்தனர். ராமகுரு 10-ஆம் வகுப்பு, ஸ்ரீ சங்கர் நான்காம் வகுப்பு படித்து வந்தனர்.
நேற்று முன்தினம், ஸ்ரீ சங்கர் தனது அண்ணனிடம் குளிக்கப் போகலாம் வா என கூறி அழைத்துள்ளார். அவன் வேண்டாம் என்று சொல்லவே, ஸ்ரீசங்கர் தொடர்ந்து அழைத்ததால் அதே பகுதியில் இருந்த கல்லுக்குழி நீரில் குளித்துக் கொண்டிருந்தனர்.
இவர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் ரெண்டு பேரும் குளித்தனர். தம்பியிடம் உனக்கு நீச்சல் தெரியாது ஆழமான இடத்திற்கு போய் விடாதே கரையில் நின்று குளித்துவிட்டு வா என்று சங்கரின் அண்ணன் கூறியுள்ளார், இருந்தபோதும் ஸ்ரீ சங்கர் நீரில் விளையாடிக்கொண்டடே ஆழமான இடத்திற்குப் போய் விட்டார்.
பின்னர், நீரில் மூழ்கக் உதவி கேட்டு கூச்சலிட்டான். ஆனால், அங்கிருந்த சிறுவர்களால் ஸ்ரீசங்கரை காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை உதவிக்கு அழைத்தனர். அங்கே வந்தவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது ஸ்ரீ சங்கர் பரிதாபமாக இறந்துவிட்டார்.
மலுமிச்சம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம், ஸ்ரீ சங்கர் தனது அண்ணனிடம் குளிக்கப் போகலாம் வா என கூறி அழைத்துள்ளார். அவன் வேண்டாம் என்று சொல்லவே, ஸ்ரீசங்கர் தொடர்ந்து அழைத்ததால் அதே பகுதியில் இருந்த கல்லுக்குழி நீரில் குளித்துக் கொண்டிருந்தனர்.
இவர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் ரெண்டு பேரும் குளித்தனர். தம்பியிடம் உனக்கு நீச்சல் தெரியாது ஆழமான இடத்திற்கு போய் விடாதே கரையில் நின்று குளித்துவிட்டு வா என்று சங்கரின் அண்ணன் கூறியுள்ளார், இருந்தபோதும் ஸ்ரீ சங்கர் நீரில் விளையாடிக்கொண்டடே ஆழமான இடத்திற்குப் போய் விட்டார்.
பின்னர், நீரில் மூழ்கக் உதவி கேட்டு கூச்சலிட்டான். ஆனால், அங்கிருந்த சிறுவர்களால் ஸ்ரீசங்கரை காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை உதவிக்கு அழைத்தனர். அங்கே வந்தவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது ஸ்ரீ சங்கர் பரிதாபமாக இறந்துவிட்டார்.
மலுமிச்சம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.