திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் அம்மா மினி கிளினிக் மையம்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்!

திருப்பூர்: பல்லடம் வட்டத்தில் இடுவாய், அறிவொளி நகர், கோடங்கி பாளையம், கேத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் அம்மா மினி கிளினிக் மையத்தை கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று துவக்கி வைத்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டத்தில் இடுவாய், அறிவொளி நகர், கோடங்கி பாளையம், கேத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் அம்மா மினி கிளினிக் மையத்தை கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று துவக்கி வைத்தார்.

பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



மேலும், அம்மா மினி கிளினிக் துவக்கவிழா மையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் துவக்கி வைத்தார். 



மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப் பொருட்களையும் வழங்கினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், தமிழக அரசு அனைத்து மக்களுக்கும் தேவையான திட்டங்களை சிறந்த முறையில் செயல்படுத்தி வருகிறது. தற்பொழுது துவங்கப்பட்டுள்ள அம்மா மினி கிளினிக் மையமும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு துவங்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் மக்கள் பயன்பெற வேண்டும் எனவும் அமைச்சர் பேசினார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...