கோவையில் போலியோ சொட்டு மருந்து முகாம்: அமைச்சர் எஸ்பி வேலுமணி துவக்கி வைத்தார்!

கோவை: கோவையில் போலியோ சொட்டு மருந்து முகாமை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி துவக்கி வைத்தார்.


கோவை: கோவையில் போலியோ சொட்டு மருந்து முகாமை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி துவக்கி வைத்தார்.

நாடு முழுவதும் 5 வயது குழந்தைக்குட்பட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.



அதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்தார்.



கோவையில் ஒரு லட்சத்து 66 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இளம்பிள்ளைவாதம் போலியோவை ஒழிக்க நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் செயல்படுகிறது.

கோவை அரசு மருத்துவமனை, மாநகராட்சி மருத்துவமனை, அரசு சுகாதார நிலையங்கள், தனியார் ஆஸ்பத்திரி, பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ரோட்டரி கிளப் நடத்தும் முகாம்கள் என மொத்தம் 346 இடங்களில் சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் 5 சிறப்பு முகாம் மற்றும் மூன்று நடமாடும் மையங்கள் செயல்பட உள்ளது. மருத்துவத்துறை அங்கன்வாடி பணியாளர்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர், ரோட்டரி கிளப்பினர் இந்த பணியில் ஈடுபட்டு உள்ளனர்.



மேலும், இன்று நடைபெறும் முகாம்களில் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 251 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே அர்ஜுனன் மற்றும் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் காளிதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...