கோவை: மோட்டார் சைக்கிளில் சென்ற அ.தி.மு.க. பிரமுகரை எதிரே வந்த யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்தச் செய்தி கேட்டு சம்பவ இடத்துக்குச் சென்ற சின்னராஜ் எம்.எல்.ஏ. நேரில் அஞ்சலி செலுத்தி குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்.
கோவை: மோட்டார் சைக்கிளில் சென்ற அ.தி.மு.க. பிரமுகரை எதிரே வந்த யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்தச் செய்தி கேட்டு சம்பவ இடத்துக்குச் சென்ற சின்னராஜ் எம்.எல்.ஏ. நேரில் அஞ்சலி செலுத்தி குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்.
லிங்காபுரம்பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் முன்னாள்செயலாளர் சம்பத்குமார் (வயது 59). அவர் இன்று மாலை 5 மணி அளவில் தனது தோட்டத்திலிருந்து லிங்காபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். வனப்பகுதிகளில் சென்றபோது காட்டு யானை அவரை வழிமறித்து தாக்கியதில் கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சிறுமுகை வனச்சரக அலுவலர் செந்தில்குமார், வனவர் நாவீந்தன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது உடலைக் கைப்பற்றி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து அரசு மருத்துவமனைக்குச் சென்ற மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் சின்னராஜ், சிறுமுகை பேரூராட்சி செயலாளர் ரவிக்குமார் மற்றும் லிங்காபுரம் சாமியப்பன் கனகராஜ் ஆகியோர் சம்பத்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அத்துடன் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
சம்பத்குமாருக்கு சிவப்பிரியா என்ற மனைவியும், நிவாஸ் என்ற மகனும் உள்ளனர். இந்தச் சம்பவம் மேட்டுப்பாளையம் அ.தி.மு.க.வினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
லிங்காபுரம்பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் முன்னாள்செயலாளர் சம்பத்குமார் (வயது 59). அவர் இன்று மாலை 5 மணி அளவில் தனது தோட்டத்திலிருந்து லிங்காபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். வனப்பகுதிகளில் சென்றபோது காட்டு யானை அவரை வழிமறித்து தாக்கியதில் கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சிறுமுகை வனச்சரக அலுவலர் செந்தில்குமார், வனவர் நாவீந்தன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது உடலைக் கைப்பற்றி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து அரசு மருத்துவமனைக்குச் சென்ற மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் சின்னராஜ், சிறுமுகை பேரூராட்சி செயலாளர் ரவிக்குமார் மற்றும் லிங்காபுரம் சாமியப்பன் கனகராஜ் ஆகியோர் சம்பத்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அத்துடன் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
சம்பத்குமாருக்கு சிவப்பிரியா என்ற மனைவியும், நிவாஸ் என்ற மகனும் உள்ளனர். இந்தச் சம்பவம் மேட்டுப்பாளையம் அ.தி.மு.க.வினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.