கோவையில் ஆடுகள், நாய்களை வேட்டையாடிய சிறுத்தை சிக்கியது!

கோவை: கோவையில் ஆடுகள், நாய்களை வேட்டையாடிய சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது!



கோவை: கோவையில் ஆடுகள், நாய்களை வேட்டையாடிய சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது!

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் வனப்பகுதியை ஒட்டியுள்ள குவாரி ஆபீஸ், காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அடிக்கடி இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 21-ம் தேதி நள்ளிரவு குவாரி ஆபீஸ் பகுதிக்கு வந்த சிறுத்தை ஒரு வீட்டின் காம்பவுன்ட் சுவரில் அமர்ந்திருந்தது.



மேலும் வீட்டின் காம்பவுன்ட் சுவரில் அமர்ந்திருந்த சிறுத்தை, சீனிவாசன் என்பவரது வீட்டில் வளர்க்கப்பட்ட நாயை வேட்டையாட முயன்றது. ஆனால் நாய் தொடர்ந்து கத்தவே நாயை விட்டுவிட்டு சிறுத்தை தப்பிச் சென்றது. இதையடுத்து மட்டப்பாரைபகுதியில் உள்ள ஆட்டுப்பட்டிக்குள் சிறுத்தை நுழைந்து அங்கிருந்த நான்கு ஆடுகளைக் கடித்தது. இதில் மூன்று ஆடுகள் உயிரிழந்தன. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து காந்திநகர் மற்றும் மட்டப்பாரை ஆகிய இடங்களில் மதுக்கரை வனத்துறையினர் சிறுத்தையைப் பிடிக்க கூண்டு வைத்தனர்.



இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் காந்தி நகர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிறுத்தை பிடிபட்டது. சிறுத்தையை வனத்துறை மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெங்குமரஹாடா வனப்பகுதியில்விட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...