கோவையில் விபத்து ஏற்படுத்திய சிறுவனின் தாய்க்கு ஒரு நாள் நூதன தண்டனை வழங்கி தீர்ப்பு!

கோவை: கோவையில் சிறுவன் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதை கவனிக்காமல், அனுமதித்த சிறுவனின் தாய் ஒருநாள் கூண்டில் நிற்க வேண்டும் என்று நூதன தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.


கோவை: கோவையில் சிறுவன் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதை கவனிக்காமல், அனுமதித்த சிறுவனின் தாய் ஒருநாள் கூண்டில் நிற்க வேண்டும் என்று நூதன தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

கோவை, ரத்தினபுரியை சேர்ந்த 17 வயது சிறுவன், கடந்தாண்டு, பிப்ரவரி 9ம் தேதி நண்பனை அழைத்துக் கொண்டு தனது தாயாரின் ஸ்கூட்டியில் சென்றார்.

இதனிடையே, காந்திபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பேருந்து மோதியதில், ஸ்கூட்டியின் பின்னால் அமர்ந்திருந்த 16 வயது சிறுவன் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தார்.

பின்னர், இது தொடர்பாக, போலீசார் மற்றும் கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவினர் வழக்கு பதிந்து, பேருந்து ஓட்டுனர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

மேலும், 18 வயது நிரம்பாத சிறுவன், ஸ்கூட்டியை ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தியதால், வாகனத்தின் உரிமையாளரான, அவரது தாயார் பாண்டீஸ்வரி மீது தனியாக வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை ஜே.எம்:8, நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதனிடையே, இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ராமதாஸ், 2019-ம் ஆண்டு மோட்டார் வாகன சட்ட திருத்தப்படி, வாகன உரிமையாளரான பாண்டீஸ்வரியை, நீதிமன்றம் கலையும் வரை, குற்றவாளி கூண்டில் நிற்க வைத்து ஒரு நாள் தண்டனையுடன், 25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

இதனைத் தொடர்ந்து, பாண்டீஸ்வரி காலை முதல் மாலை வரை நீதிமன்ற குற்றவாளிக்கூண்டில் போலீஸ் பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...