கோவை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு..!

கோவை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு


கோவை: இன்று கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில், அலுவலகத்தில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் உட்பட உயர் போலீஸ் அதிகாரிகள் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 

இன்று ஜனவரி 25 நாடு முழுவதும், தேசிய வாக்காளர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து இன்று காலை கோவை மாநகர போலீஸ் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை ஆணையர்கள் கோவிந்தராஜன் மற்றும் குணசேகரன் முன்னிலையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்கப்பட்டது. 



"இந்தியாவின் குடிமக்களாகிய நாம் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு, அதன்மூலம் நமது நாட்டின் ஜனநாயக பாரம்பரியங்களையும் சுதந்திரமான முறையில் மற்றும் அமைதியான முறையில் தேர்தல்களின் கண்ணியத்தையும் நிலைப்படுத்தி, ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றி அனைவரும் வாக்களிக்க உறுதியேற்போம்.

மதம் இனம் ஆகியவற்றின் மீது செல்வாக்கு செலுத்தாமல் ஜாதி சமூக மொழி வேறுபாடுகளை கலைந்து தேர்தல் சமயங்களில் ஜனநாயக கடமையை முழுமையாக ஆற்றி வாக்காளர் உடைய கடமையை செலுத்துவோம்",என அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். 

இதில் 100-க்கும் மேற்பட்ட கமிஷனர் அலுவலக அரசு பணியாளர்கள் பங்கேற்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...