கோவை: கோவை, மதுரை உள்பட பல்வேறு இடங்களில் ஆன்லைன் டிரேடிங் நடத்தி பலகோடி ரூபாய் பணத்தைச் சுருட்டிய ஆசாமி கைது செய்யப்பட்டார்.
கோவை: கோவை, மதுரை உள்பட பல்வேறு இடங்களில் ஆன்லைன் டிரேடிங் நடத்தி பலகோடி ரூபாய் பணத்தைச் சுருட்டிய ஆசாமி கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 37). இவர் ஆன்லைன் டிரேடிங் நடத்தி வந்தார். இவர் கோவை எஸ்.எஸ்.குளத்தைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் அவருக்குத் தெரிந்த நண்பர்கள் சிலரிடம் அதிக லாபம் பெற்றுத் தருவதாக ஆசைகாட்டி 2.5 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சிவக்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் கோவை குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்த ஜெகதீஷை தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று ஜெகதீஷை நாகர்கோவிலில் வைத்து போலீசார் கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர். இவர் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி 40 கோடி ரூபாய்க்குமேல் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் பத்தாயிரம் வீதம் ஏழு மாதங்களுக்கு வழங்குவார். இரு மாதங்களுக்கு மட்டும் 10 சதவீத வட்டியில் வழங்கியுள்ளார். அதன்பிறகு பணத்தை மோசடி செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். இப்படி கோவையில் 40-க்கும் மேற்பட்டோரிடம் மோசடி செய்துள்ளார். மதுரையில் 11 பேரிடம் ஏமாற்றியதாகவும் சென்னையில் சிலரிடம் ஏமாற்றியதாகவும் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 40 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்திருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 37). இவர் ஆன்லைன் டிரேடிங் நடத்தி வந்தார். இவர் கோவை எஸ்.எஸ்.குளத்தைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் அவருக்குத் தெரிந்த நண்பர்கள் சிலரிடம் அதிக லாபம் பெற்றுத் தருவதாக ஆசைகாட்டி 2.5 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சிவக்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் கோவை குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்த ஜெகதீஷை தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று ஜெகதீஷை நாகர்கோவிலில் வைத்து போலீசார் கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர். இவர் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி 40 கோடி ரூபாய்க்குமேல் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் பத்தாயிரம் வீதம் ஏழு மாதங்களுக்கு வழங்குவார். இரு மாதங்களுக்கு மட்டும் 10 சதவீத வட்டியில் வழங்கியுள்ளார். அதன்பிறகு பணத்தை மோசடி செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். இப்படி கோவையில் 40-க்கும் மேற்பட்டோரிடம் மோசடி செய்துள்ளார். மதுரையில் 11 பேரிடம் ஏமாற்றியதாகவும் சென்னையில் சிலரிடம் ஏமாற்றியதாகவும் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 40 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்திருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.