கோவை: கோவை - புனே இடையே 'கோ ஏர்' நிறுவனம் வரும் 29-ந்தேதி முதல் விமான சேவையைத் தொடங்குகிறது.
கோவை: கோவை - புனே இடையே 'கோ ஏர்' நிறுவனம் வரும் 29-ந்தேதி முதல் விமான சேவையைத் தொடங்குகிறது.
இதுதொடர்பாக 'கோ ஏர்' இணையதளத்தில் பகிரப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, விமான எண் ஜி 8 881 கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.05 மணிக்கு புனேயைச் சென்றடையும்.

அதேபோல் விமான எண் ஜி 8 882 மதியம் 1.35 மணிக்கு புனேயில் இருந்து புறப்பட்டு மதியம் 3.05 மணிக்கு கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தை வந்துசேரும்.
இதுதொடர்பாக கொங்கு குளோபல் ஃபோரம் (கேஜிஎஃப்) இயக்குனர் டி.நந்தா குமார் கூறும்போது, `கோ ஏர்' இன் இந்த முயற்சியை நாங்கள் முழுமனதுடன் வரவேற்கிறோம். தொற்றுநோய் பாதிக்கப்படுவதற்கு முன்பு காலை நேரம் மட்டும் விமான சேவை இருந்தது.இப்போதைய அறிவிப்பு தொழிலதிபர், மாணவர்கள் மற்றும் பயணம் செய்யும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்'' என்றார்.
இதுதொடர்பாக 'கோ ஏர்' இணையதளத்தில் பகிரப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, விமான எண் ஜி 8 881 கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.05 மணிக்கு புனேயைச் சென்றடையும்.
அதேபோல் விமான எண் ஜி 8 882 மதியம் 1.35 மணிக்கு புனேயில் இருந்து புறப்பட்டு மதியம் 3.05 மணிக்கு கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தை வந்துசேரும்.
இதுதொடர்பாக கொங்கு குளோபல் ஃபோரம் (கேஜிஎஃப்) இயக்குனர் டி.நந்தா குமார் கூறும்போது, `கோ ஏர்' இன் இந்த முயற்சியை நாங்கள் முழுமனதுடன் வரவேற்கிறோம். தொற்றுநோய் பாதிக்கப்படுவதற்கு முன்பு காலை நேரம் மட்டும் விமான சேவை இருந்தது.இப்போதைய அறிவிப்பு தொழிலதிபர், மாணவர்கள் மற்றும் பயணம் செய்யும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்'' என்றார்.