வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24.63 லட்சம் வசூலிக்கப்பட்டது. மேற்கு, வடக்கு, தெற்கு மண்டலங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகம் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் கடைகளை நடத்தி வந்த வாடகைதாரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. மொத்தம் 10 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.




மாநகராட்சிக்குட்பட்ட வணிக வளாக கடைகளில் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்திருந்த வாடகைதாரர்களுக்கு நிலுவை தொகை செலுத்த கோரி மாநகராட்சி அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், நேரில் சென்று தெரிவித்தும் பலனளிக்கவில்லை. இதையடுத்து, நிர்வாகம் இந்த கடைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது.




மேற்கு மண்டலம் வார்டு எண்.71-க்குட்பட்ட DB Road-ல் 1 கடை, ஆரோக்கியசாமி ரோட்டில் 3 கடைகள், டி.வி.சாமி ரோட்டில் 1 கடை, வார்டு எண்.73-க்குட்பட்ட சுப்ரி வீதியில் 1 கடை என மேற்கு மண்டலத்தில் மொத்தம் 6 கடைகள் சீல் வைக்கப்பட்டன. வடக்கு மண்டலம் வார்டு எண்.2-க்குட்பட்ட துடியலூரில் 2 மட்டன் ஸ்டால்கள் பூட்டப்பட்டன.




தெற்கு மண்டலம் வார்டு எண்.96-க்குட்பட்ட தக்காளி மார்க்கெட்டில் 2 கடைகள் சீல் வைக்கப்பட்டன. இவ்வாறு மூன்று மண்டலங்களில் மொத்தம் 10 மாநகராட்சி வணிக வளாக கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன.




இந்த 10 கடைகளின் மொத்த வாடகை நிலுவைத் தொகை ரூ.54,38,988 ஆகும். மேற்கண்ட நடவடிக்கையின் மூலம் இதுவரை ரூ.24,63,577 வசூல் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலுவைத் தொகையை வசூலிக்க நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




மாநகராட்சி வணிக வளாகங்களில் கடை நடத்தும் வாடகைதாரர்கள் சரியான நேரத்தில் வாடகை செலுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் இதுபோன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Newsletter

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...