கோவை: கோவை ரத்தினபுரி பகுதியில் பட்டப்பகலில் பிளக்ஸ் போர்டு காண்ட்ராக்டர் வீட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 20 பவுன் நகை திருடப்பட்டது.
கோவை: கோவை ரத்தினபுரி பகுதியில் பட்டப்பகலில் பிளக்ஸ் போர்டு காண்ட்ராக்டர் வீட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 20 பவுன் நகை திருடப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவை ரத்தினபுரி பகுதியில் வசிப்பவர் நாகராஜ். பிளக்ஸ் போர்டு காண்ட்ராக்டரான இவர் இன்று காலை வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு அவரும், அவரது மனைவியும் வேலைக்குச் சென்றுவிட்டனர். சிறிது நேரம் கழித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரது வீடு உடைந்து இருப்பதைப் பார்த்து அவருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் ரத்தினபுரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை செய்ததில் வீட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகளை யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் மூலம் சோதனை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவை ரத்தினபுரி பகுதியில் வசிப்பவர் நாகராஜ். பிளக்ஸ் போர்டு காண்ட்ராக்டரான இவர் இன்று காலை வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு அவரும், அவரது மனைவியும் வேலைக்குச் சென்றுவிட்டனர். சிறிது நேரம் கழித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரது வீடு உடைந்து இருப்பதைப் பார்த்து அவருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் ரத்தினபுரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை செய்ததில் வீட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகளை யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் மூலம் சோதனை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.