கோவை: ஸ்டாலின் அமைச்சராக இருக்கும்போது ஏன் கிராம சபை கூட்டம் நடத்தவில்லை இன்று அமைச்சர் வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை: ஸ்டாலின் அமைச்சராக இருக்கும்போது ஏன் கிராம சபை கூட்டம் நடத்தவில்லை இன்று அமைச்சர் வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை, தேவிபட்டணம், கம்பாலபட்டி உள்ளிட்ட கிராமங்களில் தமிழக அரசின் மினி கிளினிக்குகள் திறப்பு விழா மற்றும் கம்பாலபட்டி கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே ரூ 4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேம்பால திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி, வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு உள்ளிட்டோர் கலந்துகொண்டு கிளினிக்குகளை திறந்து வைத்தனர். அத்துடன் பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தனர்.

இதையடுத்து அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசினார். ''ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது மக்கள் சபை கூட்டத்தை ஏன் நடத்தவில்லை. தற்போது சிறப்பாக உள்ளாட்சித்துறை செயல்படுகிறது. இதற்காக 143 விருதுகள் வாங்கியுள்ளேன். கிராமசபை கூட்டங்கள் நடத்தும் எதிர்க்கட்சித் தலைவருக்கு எத்தனை ஊராட்சிகள் உள்ளது என்பதுகூட தெரியவில்லை.
தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் பொறுப்பேற்பார்". இவ்வாறு அவர் பேசினார்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை, தேவிபட்டணம், கம்பாலபட்டி உள்ளிட்ட கிராமங்களில் தமிழக அரசின் மினி கிளினிக்குகள் திறப்பு விழா மற்றும் கம்பாலபட்டி கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே ரூ 4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேம்பால திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி, வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு உள்ளிட்டோர் கலந்துகொண்டு கிளினிக்குகளை திறந்து வைத்தனர். அத்துடன் பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தனர்.
இதையடுத்து அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசினார். ''ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது மக்கள் சபை கூட்டத்தை ஏன் நடத்தவில்லை. தற்போது சிறப்பாக உள்ளாட்சித்துறை செயல்படுகிறது. இதற்காக 143 விருதுகள் வாங்கியுள்ளேன். கிராமசபை கூட்டங்கள் நடத்தும் எதிர்க்கட்சித் தலைவருக்கு எத்தனை ஊராட்சிகள் உள்ளது என்பதுகூட தெரியவில்லை.
தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் பொறுப்பேற்பார்". இவ்வாறு அவர் பேசினார்.