கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை, குடிநீர்‌ திட்டப்பணிக்கான பூமி பூஜை: அமைச்சா்‌ எஸ்‌.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்!

கோவை: கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம், குடிநீர்‌ திட்டப்பணி மற்றும் பல்வேறு பணிகளுக்கான பூமி பூஜையை அமைச்சா்‌ எஸ்‌.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம், குடிநீர்‌ திட்டப்பணி மற்றும் பல்வேறு பணிகளுக்கான பூமி பூஜையை அமைச்சா்‌ எஸ்‌.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

கோயம்புத்தூார்‌ மாநகராட்சி, தெற்கு மண்டலத்தில்‌ பாதாள சாக்கடை திட்டப்பணிகள்‌ மற்றும்‌ குடிநீர் திட்டப்பணிகள்‌ முடிவடைந்த பகுதிகளில்‌ ரூ.3 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரம்‌ மதிப்பீட்டில்‌ தார்ச்சாலை அமைக்கும்‌ பணி, மழைநீர்‌ வடிகால்‌, பூங்கா, பாலம்‌ கட்டுதல்‌ ஆகிய பணிகளுக்கான பூமி பூஜையை நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்‌ திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி‌ இன்று துவக்கி வைத்தார்.



முன்னதாக மத்திய மண்டலத்தில்‌ உள்ள வ.உ.சி. மைதானத்தில்‌ கோவை சருக்கு விளையாட்டு சங்கம் சார்பில்‌ மேம்படுத்தப்பட்ட சருக்கு விளையாட்டு மைதானம் மற்றும் அரசு பணியாளர்‌ காலனியில்‌ ரூ.66 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கத்தை பொதுமக்கள்‌ பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலத்தில்‌ மாநகராட்சி பொதுநிதியிலிருந்து வார்டு எண்‌ 87-க்குட்பட்ட மகாலட்சுமி நகர்‌ பகுதியில்‌ ரூ.13 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ பூங்கா அமைக்கும்‌ பணிக்கும்‌, குறிஞ்சிநகர்‌ பகுதியில்‌ ரூ.75 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ மழைநீர்‌ வடிகால்‌ மற்றும்‌ சிறுபாலம்‌ அமைக்கும்‌ பணிக்கும்‌, ரூ.28 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ தார்ச்சாலை அமைக்கும்‌ பணிக்கும்‌, வார்டு எண்‌ 88-க்கு உட்பட்ட சுண்டக்காமுத்தூர்‌ பிரதான சாலையில்‌ ரூ.35 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ அரசு பணியாளர்‌ காலனியில்‌ இருந்து லட்சுமி நகர்‌ வரை மழைநீர்‌ வடிகால்‌ மற்றும்‌ சிறுபாலம்‌ அமைக்கும்‌ பணிக்கும்‌, மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.7 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ லட்சுமி நகர்‌ 3-வது வீதியில்‌ தார்ச்சாலை அமைக்கும்‌ பணிக்கும்‌, தாழ்பேக்டரி வீதியில்‌ ரூ.19.50 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ தார்ச்சாலை மற்றும்‌ வார்டு பகுதியில்‌ தார்பேட்ச்‌ அமைக்கும்‌ பணிக்கும்‌, வார்டு எண்‌ 93-க்குட்பட்ட ஜெயாநகா்‌ பகுதியில்‌‌ ரூ.23.90 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ தார்ச்சாலை அமைக்கும்‌ பணிக்கும்‌, ஜெயாநகர்‌ பிரதான சாலையில்‌ மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.39 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ பூங்கா மற்றும்‌ சிறுவர்‌ விளையாட்டு மைதானம்‌ அமைக்கும்‌ பணிக்கும்‌, பொங்காளியம்மன்‌ நகா்‌ பகுதியில்‌ ஓடையின்‌ குறுக்கே ரூ.9.25 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ பாலம்‌ அமைக்கும்‌ பணிகளுக்கான பூமி பூஜையை அமைச்சர்‌ துவக்கி வைத்தார்‌.

அதனைத்தொடர்ந்து, கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலத்தில்‌ வார்டு எண்‌ 92-க்குட்பட்ட பெருமாள்சாமி நகா்‌ பகுதியில்‌ டூரிஃப் (Turif) திட்டத்தின்‌ கீழ்‌ ரூ.41.10 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ தார்ச்சாலை அமைக்கும்‌ பணிக்கும்‌, கோவைப்புதூர்‌ பிரிவு, இ.பி.காலனி பகுதியில்‌ டூரிஃப் (Turif) திட்டத்தின்‌ கீழ்‌ ரூ.26.65 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ தார்ச்சாலை அமைக்கும்‌ பணிக்கும்‌ ஆகமொத்தம்‌ ரூ.3 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரம்‌ மதிப்பீட்டில்‌ தார்ச்சாலை அமைக்கும்‌ பணிகளுக்கும்‌, மழைநீர்வடிகால்‌, பூங்கா பாலம்‌ ஆகிய பணிகளுக்கான பூமி பூஜையை நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்‌ திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சா்‌ எஸ்‌.பி.வேலுமணி துவக்கி வைத்தார்‌.



பின்னர்‌ தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌ 88-க்குட்பட்ட அரசு பணியாளர்‌ காலனியில்‌ மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.66 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டி முடிக்கப்பட்டுள்ள இறகுப் பந்து உள்விளையாட்டு அரங்கத்தை அமைச்சர்‌ வேலுமணி பொதுமக்கள்‌ பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்‌. இந்நிகழ்ச்சிகளில்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌‌, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினா்‌ அம்மன்‌ கே.அர்ச்சுணன்‌, துணை ஆணையாளர்‌ எஸ்‌.மதுராந்தகி‌, செயற்பொறியாளர்‌ ஞானவேல்‌, மண்டல உதவி ஆணையர்கள்‌ தி.ரா.ரவி, மகேஷ்கனகராஜ்‌ மற்றும்‌ உதவி செயற்பொறியாளர்கள்‌, உதவி பொறியாளர்கள்‌ மற்றும்‌ மண்டல சுகாதார அலுவலா்கள்‌ லோகநாதன்‌, ராதாகிருஷ்ணன்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....