கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை, குடிநீர்‌ திட்டப்பணிக்கான பூமி பூஜை: அமைச்சா்‌ எஸ்‌.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்!

கோவை: கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம், குடிநீர்‌ திட்டப்பணி மற்றும் பல்வேறு பணிகளுக்கான பூமி பூஜையை அமைச்சா்‌ எஸ்‌.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம், குடிநீர்‌ திட்டப்பணி மற்றும் பல்வேறு பணிகளுக்கான பூமி பூஜையை அமைச்சா்‌ எஸ்‌.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

கோயம்புத்தூார்‌ மாநகராட்சி, தெற்கு மண்டலத்தில்‌ பாதாள சாக்கடை திட்டப்பணிகள்‌ மற்றும்‌ குடிநீர் திட்டப்பணிகள்‌ முடிவடைந்த பகுதிகளில்‌ ரூ.3 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரம்‌ மதிப்பீட்டில்‌ தார்ச்சாலை அமைக்கும்‌ பணி, மழைநீர்‌ வடிகால்‌, பூங்கா, பாலம்‌ கட்டுதல்‌ ஆகிய பணிகளுக்கான பூமி பூஜையை நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்‌ திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி‌ இன்று துவக்கி வைத்தார்.



முன்னதாக மத்திய மண்டலத்தில்‌ உள்ள வ.உ.சி. மைதானத்தில்‌ கோவை சருக்கு விளையாட்டு சங்கம் சார்பில்‌ மேம்படுத்தப்பட்ட சருக்கு விளையாட்டு மைதானம் மற்றும் அரசு பணியாளர்‌ காலனியில்‌ ரூ.66 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கத்தை பொதுமக்கள்‌ பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலத்தில்‌ மாநகராட்சி பொதுநிதியிலிருந்து வார்டு எண்‌ 87-க்குட்பட்ட மகாலட்சுமி நகர்‌ பகுதியில்‌ ரூ.13 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ பூங்கா அமைக்கும்‌ பணிக்கும்‌, குறிஞ்சிநகர்‌ பகுதியில்‌ ரூ.75 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ மழைநீர்‌ வடிகால்‌ மற்றும்‌ சிறுபாலம்‌ அமைக்கும்‌ பணிக்கும்‌, ரூ.28 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ தார்ச்சாலை அமைக்கும்‌ பணிக்கும்‌, வார்டு எண்‌ 88-க்கு உட்பட்ட சுண்டக்காமுத்தூர்‌ பிரதான சாலையில்‌ ரூ.35 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ அரசு பணியாளர்‌ காலனியில்‌ இருந்து லட்சுமி நகர்‌ வரை மழைநீர்‌ வடிகால்‌ மற்றும்‌ சிறுபாலம்‌ அமைக்கும்‌ பணிக்கும்‌, மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.7 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ லட்சுமி நகர்‌ 3-வது வீதியில்‌ தார்ச்சாலை அமைக்கும்‌ பணிக்கும்‌, தாழ்பேக்டரி வீதியில்‌ ரூ.19.50 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ தார்ச்சாலை மற்றும்‌ வார்டு பகுதியில்‌ தார்பேட்ச்‌ அமைக்கும்‌ பணிக்கும்‌, வார்டு எண்‌ 93-க்குட்பட்ட ஜெயாநகா்‌ பகுதியில்‌‌ ரூ.23.90 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ தார்ச்சாலை அமைக்கும்‌ பணிக்கும்‌, ஜெயாநகர்‌ பிரதான சாலையில்‌ மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.39 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ பூங்கா மற்றும்‌ சிறுவர்‌ விளையாட்டு மைதானம்‌ அமைக்கும்‌ பணிக்கும்‌, பொங்காளியம்மன்‌ நகா்‌ பகுதியில்‌ ஓடையின்‌ குறுக்கே ரூ.9.25 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ பாலம்‌ அமைக்கும்‌ பணிகளுக்கான பூமி பூஜையை அமைச்சர்‌ துவக்கி வைத்தார்‌.

அதனைத்தொடர்ந்து, கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலத்தில்‌ வார்டு எண்‌ 92-க்குட்பட்ட பெருமாள்சாமி நகா்‌ பகுதியில்‌ டூரிஃப் (Turif) திட்டத்தின்‌ கீழ்‌ ரூ.41.10 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ தார்ச்சாலை அமைக்கும்‌ பணிக்கும்‌, கோவைப்புதூர்‌ பிரிவு, இ.பி.காலனி பகுதியில்‌ டூரிஃப் (Turif) திட்டத்தின்‌ கீழ்‌ ரூ.26.65 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ தார்ச்சாலை அமைக்கும்‌ பணிக்கும்‌ ஆகமொத்தம்‌ ரூ.3 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரம்‌ மதிப்பீட்டில்‌ தார்ச்சாலை அமைக்கும்‌ பணிகளுக்கும்‌, மழைநீர்வடிகால்‌, பூங்கா பாலம்‌ ஆகிய பணிகளுக்கான பூமி பூஜையை நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்‌ திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சா்‌ எஸ்‌.பி.வேலுமணி துவக்கி வைத்தார்‌.



பின்னர்‌ தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌ 88-க்குட்பட்ட அரசு பணியாளர்‌ காலனியில்‌ மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.66 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டி முடிக்கப்பட்டுள்ள இறகுப் பந்து உள்விளையாட்டு அரங்கத்தை அமைச்சர்‌ வேலுமணி பொதுமக்கள்‌ பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்‌. இந்நிகழ்ச்சிகளில்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌‌, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினா்‌ அம்மன்‌ கே.அர்ச்சுணன்‌, துணை ஆணையாளர்‌ எஸ்‌.மதுராந்தகி‌, செயற்பொறியாளர்‌ ஞானவேல்‌, மண்டல உதவி ஆணையர்கள்‌ தி.ரா.ரவி, மகேஷ்கனகராஜ்‌ மற்றும்‌ உதவி செயற்பொறியாளர்கள்‌, உதவி பொறியாளர்கள்‌ மற்றும்‌ மண்டல சுகாதார அலுவலா்கள்‌ லோகநாதன்‌, ராதாகிருஷ்ணன்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....