கோவை: கோவை அருகே உள்ள கிராமப்புற மலைப்பகுதியில் பன்றி வேட்டைக்குச் சென்றபோது சட்டவிரோதமாக வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி வெடித்து வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை: கோவை அருகே உள்ள கிராமப்புற மலைப்பகுதியில் பன்றி வேட்டைக்குச் சென்றபோது சட்டவிரோதமாக வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி வெடித்து வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவை அருகே உள்ள தீத்திபாளையம், மாதேஷ் கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் அய்யாச்சாமி (வயது 40). இவர் வனப்பகுதி கிராமப் பகுதியில் வசித்து வருகிறார். நேற்று இரவு இவரது நண்பர்கள் பாபு, ஆனந்த், ரங்கநாதன், ராமசாமி ஆகியோருடன் சட்டவிரோதமாக லைசென்ஸ் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு ஐயா சாமி மலை வனப்பகுதிக்குள் சென்றனர். அந்தப் பகுதியில் அவர்கள் காட்டுப் பன்றியை வேட்டையாடச் சென்றதாக தெரிகிறது.
அப்போது அவர்களில் ஒருவர் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி திடீரென காட்டுப் பகுதியில் உள்ள மரக்கிளையில் உராய்ந்து வெடித்தது. இதில் அய்யாசாமி மீது குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்ததும் மலை கிராம மக்கள் வனத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி நண்பர்கள் 4 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு துப்பாக்கி லைசென்ஸ் இல்லாமல் வைத்திருந்தது குறித்தும் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவை அருகே உள்ள தீத்திபாளையம், மாதேஷ் கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் அய்யாச்சாமி (வயது 40). இவர் வனப்பகுதி கிராமப் பகுதியில் வசித்து வருகிறார். நேற்று இரவு இவரது நண்பர்கள் பாபு, ஆனந்த், ரங்கநாதன், ராமசாமி ஆகியோருடன் சட்டவிரோதமாக லைசென்ஸ் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு ஐயா சாமி மலை வனப்பகுதிக்குள் சென்றனர். அந்தப் பகுதியில் அவர்கள் காட்டுப் பன்றியை வேட்டையாடச் சென்றதாக தெரிகிறது.
அப்போது அவர்களில் ஒருவர் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி திடீரென காட்டுப் பகுதியில் உள்ள மரக்கிளையில் உராய்ந்து வெடித்தது. இதில் அய்யாசாமி மீது குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்ததும் மலை கிராம மக்கள் வனத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி நண்பர்கள் 4 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு துப்பாக்கி லைசென்ஸ் இல்லாமல் வைத்திருந்தது குறித்தும் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.