பன்றி வேட்டைக்குச் சென்றபோது நாட்டுத்துப்பாக்கி வெடித்து ஒருவர் பலி!

கோவை: கோவை அருகே உள்ள கிராமப்புற மலைப்பகுதியில் பன்றி வேட்டைக்குச் சென்றபோது சட்டவிரோதமாக வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி வெடித்து வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: கோவை அருகே உள்ள கிராமப்புற மலைப்பகுதியில் பன்றி வேட்டைக்குச் சென்றபோது சட்டவிரோதமாக வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி வெடித்து வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவை அருகே உள்ள தீத்திபாளையம், மாதேஷ் கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் அய்யாச்சாமி (வயது 40). இவர் வனப்பகுதி கிராமப் பகுதியில் வசித்து வருகிறார். நேற்று இரவு இவரது நண்பர்கள் பாபு, ஆனந்த், ரங்கநாதன், ராமசாமி ஆகியோருடன் சட்டவிரோதமாக லைசென்ஸ் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு ஐயா சாமி மலை வனப்பகுதிக்குள் சென்றனர். அந்தப் பகுதியில் அவர்கள் காட்டுப் பன்றியை வேட்டையாடச் சென்றதாக தெரிகிறது.

அப்போது அவர்களில் ஒருவர் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி திடீரென காட்டுப் பகுதியில் உள்ள மரக்கிளையில் உராய்ந்து வெடித்தது. இதில் அய்யாசாமி மீது குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்ததும் மலை கிராம மக்கள் வனத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி நண்பர்கள் 4 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டு துப்பாக்கி லைசென்ஸ் இல்லாமல் வைத்திருந்தது குறித்தும் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...