கோவையில் வீட்டின்முன் மது அருந்தியதை தட்டிக்கேட்ட சமையல்காரர் - நண்பருக்கு கத்திக்குத்து, 3 பேர் கைது!

கோவை: வீட்டின் முன் மது அருந்தியதை. தட்டிக்கேட்ட சமையல்காரருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


கோவை: வீட்டின் முன் மது அருந்தியதை. தட்டிக்கேட்ட சமையல்காரருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- மேட்டுப்பாளையம், சிறுமுகை ராஜபாளையம், ஜே.ஜே நகரைச் சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 22) சமையல் தொழிலாளி. நேற்று இவரது வீட்டின் முன்பு 3 வாலிபர்கள் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். இதைக்கண்ட அரவிந்தன் மற்றும் அவரது நண்பர் பிரதீப்குமார் ஆகியோர் மது அருந்திக் கொண்டிருந்த வாலிபர்களை அங்கிருந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அந்த வாலிபர்கள் அங்கிருந்து செல்ல மறுத்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதில் திடீரென அந்த வாலிபர்கள் அரவிந்தன் மற்றும் பிரதீப்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்திவிட்டு ஓடிவிட்டனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அரவிந்தன் மற்றும் பிரதீப்குமாரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து அரவிந்தன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் கே.என்.ஜி புதூரைச் சேர்ந்த தினேஷ்குமார் என்கிற வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர்களான ஜே.ஜே நகரைச் சேர்ந்த பூபதி, கோவை ஆர்.எஸ். புரத்தைச் சேர்ந்த அருண்குமார் ஆகியோர் குடி போதையில் கத்தியால் குத்தியது தெரியவந்தது.இதை அடுத்து போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...