பொள்ளாச்சி அருகே 40 டன் மானிய விலை உரமூட்டைகள் பறிமுதல்: அண்டை மாநிலத்துக்கு கடத்தி விற்க முயன்றது அம்பலம்!

கோவை: பொள்ளாச்சி அருகே 40 டன் மானிய விலை உரமூட்டைகள் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டன. முதல்கட்ட விசாரணையில் அவை அண்டை மாநிலத்துக்கு கடத்தி விற்க முயன்றது அம்பலமானது.


கோவை: பொள்ளாச்சி அருகே 40 டன் மானிய விலை உரமூட்டைகள் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டன. முதல்கட்ட விசாரணையில் அவை அண்டை மாநிலத்துக்கு கடத்தி விற்க முயன்றது அம்பலமானது.

பொள்ளாச்சி அருகே உள்ள கெடிமேட்டில் உள்ள ஒரு குடோனில், விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் உர மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.



இதையடுத்து பொள்ளாச்சி வட்டாட்சியர் தணிகைவேல் தலைமையிலான வருவாய்த்துறை மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் அப்பகுதி குடோனை சோதனையிட்டனர். அதில் 40 டன் எடையுள்ள 905 உர மூட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.



விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் யூரியா உர மூட்டைகள் புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்டு, குடோனில் பதுக்கி வைத்து, வேறு பெயரில் சாக்குப் பைகளில் நிரப்பப்பட்டு கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு, கடத்திச் சென்று அதிக விலைக்கு விற்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து உர மூட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் குடோனுக்கு சீல் வைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள குடோன் மேலாளர் சந்தோஷ் மற்றும் உரிமையாளர் மும்மூர்த்தி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். `அரசு மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கும் உர மூட்டைகளைக் கடத்தியதால், இவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....