கோவை: பொள்ளாச்சி அருகே 40 டன் மானிய விலை உரமூட்டைகள் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டன. முதல்கட்ட விசாரணையில் அவை அண்டை மாநிலத்துக்கு கடத்தி விற்க முயன்றது அம்பலமானது.
கோவை: பொள்ளாச்சி அருகே 40 டன் மானிய விலை உரமூட்டைகள் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டன. முதல்கட்ட விசாரணையில் அவை அண்டை மாநிலத்துக்கு கடத்தி விற்க முயன்றது அம்பலமானது.
பொள்ளாச்சி அருகே உள்ள கெடிமேட்டில் உள்ள ஒரு குடோனில், விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் உர மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து பொள்ளாச்சி வட்டாட்சியர் தணிகைவேல் தலைமையிலான வருவாய்த்துறை மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் அப்பகுதி குடோனை சோதனையிட்டனர். அதில் 40 டன் எடையுள்ள 905 உர மூட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் யூரியா உர மூட்டைகள் புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்டு, குடோனில் பதுக்கி வைத்து, வேறு பெயரில் சாக்குப் பைகளில் நிரப்பப்பட்டு கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு, கடத்திச் சென்று அதிக விலைக்கு விற்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து உர மூட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் குடோனுக்கு சீல் வைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள குடோன் மேலாளர் சந்தோஷ் மற்றும் உரிமையாளர் மும்மூர்த்தி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். `அரசு மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கும் உர மூட்டைகளைக் கடத்தியதால், இவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள கெடிமேட்டில் உள்ள ஒரு குடோனில், விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் உர மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பொள்ளாச்சி வட்டாட்சியர் தணிகைவேல் தலைமையிலான வருவாய்த்துறை மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் அப்பகுதி குடோனை சோதனையிட்டனர். அதில் 40 டன் எடையுள்ள 905 உர மூட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் யூரியா உர மூட்டைகள் புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்டு, குடோனில் பதுக்கி வைத்து, வேறு பெயரில் சாக்குப் பைகளில் நிரப்பப்பட்டு கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு, கடத்திச் சென்று அதிக விலைக்கு விற்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து உர மூட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் குடோனுக்கு சீல் வைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள குடோன் மேலாளர் சந்தோஷ் மற்றும் உரிமையாளர் மும்மூர்த்தி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். `அரசு மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கும் உர மூட்டைகளைக் கடத்தியதால், இவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.