நீலகிரி: தமிழகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை நவீனப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், தீ செயலி மூலம் துரிதமாக செயல்பட முடியும் என்று தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் தலைவர் சைலேந்திர பாபு தெரிவித்தார்.
நீலகிரி: தமிழகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை நவீனப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், தீ செயலி மூலம் துரிதமாகச் செயல்பட முடியும் என்று தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் தலைவர் சைலேந்திர பாபு தெரிவித்தார்.

உதகை குன்னூர் தீயணைப்பு நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் தலைவர் சைலேந்திர பாபு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், பொதுமக்கள் தங்களது கைப்பேசியில் தீ செயலியை பதிவிறக்கம் செய்து ஆபத்து காலத்தில் இழப்பை தவிர்க்க தீயணைப்புத் துறைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
கடந்த ஆண்டு 21 ஆயிரம் தீ தொடர்பான அழைப்புகள் பெறப்பட்டு, அதன் மூலம் 279 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், அதே கால கட்டத்தில் 30 ஆயிரம் மீட்பு அழைப்புகள் பெறப்பட்டு 2200 பேர் தீயணைப்பு வீரர்களால் காப்பாற்றப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், தீயணைப்புத் துறை நவீனப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், வீரர்களும் எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், சென்னை மெரினா கடற்கரையில் சிறப்பு மீட்பு குழு ஏற்படுத்தப்பட்டு மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். மேலும், தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள இடங்களை பூர்த்தி செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
உதகை குன்னூர் தீயணைப்பு நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் தலைவர் சைலேந்திர பாபு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், பொதுமக்கள் தங்களது கைப்பேசியில் தீ செயலியை பதிவிறக்கம் செய்து ஆபத்து காலத்தில் இழப்பை தவிர்க்க தீயணைப்புத் துறைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
கடந்த ஆண்டு 21 ஆயிரம் தீ தொடர்பான அழைப்புகள் பெறப்பட்டு, அதன் மூலம் 279 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், அதே கால கட்டத்தில் 30 ஆயிரம் மீட்பு அழைப்புகள் பெறப்பட்டு 2200 பேர் தீயணைப்பு வீரர்களால் காப்பாற்றப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், தீயணைப்புத் துறை நவீனப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், வீரர்களும் எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், சென்னை மெரினா கடற்கரையில் சிறப்பு மீட்பு குழு ஏற்படுத்தப்பட்டு மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். மேலும், தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள இடங்களை பூர்த்தி செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.