கோவையில் அதிகாலை ஆம்னி பேருந்து - கார் நேருக்கு நேர் மோதி விபத்து; இருவர் பலி

கோவையில் அதிகாலை ஆம்னி பேருந்து - கார் நேருக்கு நேர் மோதி விபத்து; இருவர் பலி


 கோவை: கோவை அருகே இன்று அதிகாலை, மதுக்கரை அருகே ஆம்னி பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் மூதாட்டி மற்றும் டிரைவர் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி இறந்தனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கோவை கிரப்பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதி, நடராஜன் மற்றும் ராஜாமணி வயது (60). இதில், ராஜாமணி அவரது காரில் பழனியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு இன்று அதிகாலை கோவைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். 

அவர்களது காரை, பழனியை சேர்ந்த முகமது ஆசிப் வயது (38). என்பவர் ஒட்டி வந்துள்ளார்.

இன்று அதிகாலை, மதுக்கரை அருகே கோவையில் இருந்து கேரள நோக்கி சென்ற ஆம்னி பஸ் கோவை நோக்கி வந்த 

ராஜாமணியின் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. 

இந்த கோர விபத்தில், கார் அப்பளம் போல் நொறுங்கியதில்.பலத்த காயங்களுடன் இருவரும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டவர்கள் விபத்தை பார்த்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். 

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த, மதுக்கரை போலீசார், கிரேன் மூலமாக காரை உடைத்து இருவரையும்மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரி அனுப்பி வைத்தனர். அவர்களை, பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

விபத்து குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...