கோவை: கோவையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஆத்திரமடைந்த மில் அதிபர் சப் இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதால் அவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை: கோவையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஆத்திரமடைந்த மில் அதிபர் சப் இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதால் அவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள கௌலி பிரவுன் ரோட்டை அடுத்த புண்ணியகோடி ரோடு சந்திப்பில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அந்துவான், ஏட்டு கந்தசாமி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் ஒரு கார் அதிவேகமாக வந்தது. உடனடியாக போலீசார் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தினர். ஆனால் அந்த கார் போலீசாரை தாண்டி நின்றது.
இதையடுத்து போலீசார் அந்தக் காரை சோதனை செய்தனர். தொடர்ந்து கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சரியான பதில் கூறாததால் காரின் ஆவணங்களைக்காட்டுமாறு கூறினர். இதில் ஆத்திரமடைந்த கார் உரிமையாளர் காரை விட்டு கீழே இறங்கி நான் அவசர வேலையாகச் செல்கிறேன். பல லட்சம் மதிப்பில் கார் வாங்கி விட்டு ஆவணங்கள் இல்லாமல் இருக்குமா? எனக்கூறி எஸ்.ஐ மகேந்திரனை தகாத வார்த்தையில் திட்டி தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றிய நிலையில் அவர் சப்-இன்ஸ்பெக்டரை சரமாரியாக தாக்கினார்.இதைத்தொடர்ந்து இருவருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து எஸ்.ஐ.மகேந்திரன் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதனடிப்படையில் ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு ஊழியர்களை வேலை செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு பொன்னுரங்கம் வீதியைச் சேர்ந்த மில் அதிபர் அந்பித் ஜெயின் என்பவரை கைது செய்தனர். நேற்று மாலை அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள கௌலி பிரவுன் ரோட்டை அடுத்த புண்ணியகோடி ரோடு சந்திப்பில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அந்துவான், ஏட்டு கந்தசாமி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் ஒரு கார் அதிவேகமாக வந்தது. உடனடியாக போலீசார் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தினர். ஆனால் அந்த கார் போலீசாரை தாண்டி நின்றது.
இதையடுத்து போலீசார் அந்தக் காரை சோதனை செய்தனர். தொடர்ந்து கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சரியான பதில் கூறாததால் காரின் ஆவணங்களைக்காட்டுமாறு கூறினர். இதில் ஆத்திரமடைந்த கார் உரிமையாளர் காரை விட்டு கீழே இறங்கி நான் அவசர வேலையாகச் செல்கிறேன். பல லட்சம் மதிப்பில் கார் வாங்கி விட்டு ஆவணங்கள் இல்லாமல் இருக்குமா? எனக்கூறி எஸ்.ஐ மகேந்திரனை தகாத வார்த்தையில் திட்டி தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றிய நிலையில் அவர் சப்-இன்ஸ்பெக்டரை சரமாரியாக தாக்கினார்.இதைத்தொடர்ந்து இருவருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து எஸ்.ஐ.மகேந்திரன் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதனடிப்படையில் ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு ஊழியர்களை வேலை செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு பொன்னுரங்கம் வீதியைச் சேர்ந்த மில் அதிபர் அந்பித் ஜெயின் என்பவரை கைது செய்தனர். நேற்று மாலை அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.